கொரோனா கால உணவகத்துக்கு 28 லட்சம் பாக்கி! போராட்டம்!

கொரோனா கால உணவகத்துக்கு 28 லட்சம் பாக்கி! போராட்டம்!

கொரோனா கால உணவகத்துக்கு 28 லட்சம் பாக்கி! போராட்டம்!

   கு.அசோக்,

  கொரோனா வைரஸ் தொற்றின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவளித்த ஹோட்டல் உரிமையாளருக்கு  இருபத்தி எட்டு லட்ச ரூபாயை வழங்காததால் ஆவேசமடைந்த ஓட்டல் உரிமையாளர் தமது பணியாளர்களுடன் மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்புஏற்பட்டது.

   இராணிப்பேட்டை மாவட்டம் ,சோளிங்கர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல்  உரிமையாளர் வினோத்திற்கு  கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா நோயாளிகளுக்கு உணவளிக்க ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. 

  இதனடிப்படையில் நாளொன்றுக்கு 300 நபர்களுக்கு இந்த நபர் உணவை அளித்து வந்துள்ளார். இந்நிலையில் அதற்கான தொகையான இருபத்தி எட்டு லட்சம் ரூபாய் கொடுக்கப்படாமல் கடந்த ஓராண்டு காலமாக சம்மந்தப்பட்டவர்கள் இழுத்தடித்து வருகிறார்கள்.

   இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் மாவட்ட ஆட்சியர் என பல அதிகாரியிடம் சென்று கேட்டாலும் உரிய பதில் அளிக்காமல் தட்டிக் கழித்துள்ளனர்.

  இதனால் ஆவேசம் அடைந்த ஓட்டல் உரிமையாளர் மற்றும் தனது ஊழியர்களுடன் சோளிங்கர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா.

 ¢ தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோளிங்கர் காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மருத்துவமனை வளாகத்திற்கு கொண்டு சென்றனா.

  ¢ இதன் காரணமாக சோளிங்கர் திருத்தணி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது பாதிக்கப்பட்ட ஓட்டல் உரிமையாளர் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து அதற்கான தொகையை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.