எஸ்.பி.யிடம் தனியார் மருத்துவமனை அளித்த பேரிகார்டுகள்!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
வேலூர் எதற்கு பெயர் பெற்றதோ இல்லையோ, போக்குவரத்து நெரிசலுக்கும், பொதுமக்களின் "பிரேக் த ரூலுக்கும்" மிகவும் பேமஸ் ஆகும்.
போக்குவரத்தை சீராக்க மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல் துறையும் என்னதான் முயற்சிகளை எடுத்தாலும் அதற்கு ஒத்துழைப்பு கிடைப்பதில்லை.
இந்நிலையில் ஆங்காங்கே பேரிகார்டுகளை அமைத்தாலாவது போக்கு வரத்து சீராகுமா என்று பல முயற்சிகளை காவல் துறை எடுத்து வருகிறது.
அப்படியிருக்க வேலூர் மாவட்டம் போக்குவரத்து ஒழுங்கின் மேம்பாட்டுக்கு, ரூ 1 லட்சம் செலவில் 30 பேரிகேடுகளை காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ராஜேஷ் கன்னன் அவர்களிடம் சி.எம்.சி.மருத்துவமனை நிர்வாகம் நன்கொடையாக வழங்கியது.
செக்யூரிட்டி அலுவலகம் நடந்த இந்த நிகழ்வின் போது மருத்துவ மனையின் பொது கண்காணிப்பாளர் டேவிட் சந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.