தமிழகத்தின் பிரபல ரவுடி தியாகு அரியானாவில் பிடிபட்டார்! என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளைதுரை நடவடிக்கை!

தமிழகத்தின் பிரபல ரவுடி தியாகு அரியானாவில் பிடிபட்டார்! என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளைதுரை நடவடிக்கை!

  கே.ஏ.ஜெகதீஷ்வரி

 காஞ்சிபுரத்தின் பிரபல ரவுடி தியாகு என்கிற தியாகராஜனை என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளைதுரை தலைமையிலான போலீசார் பிடித்தனர்.

 சென்னையை சுற்றியிருக்கும் மாவட்டங்களை மையமாக கொண்டு பெரிய ரவுடி கும்பல் செயல்பட்டு வந்தனர். தொழில் அதிபர்கள், ரியல் எஸ்டேட்காரர்கள் என பலரிடம் மாமுல் பெற்று பந்தாவாக வலம் வந்த ரவுடிகளுக்கு  காவல் துறையில் உள்ள சிலரே உதவியாக செயல்பட்டு வந்தனர்.

  அதற்காக லட்சங்களும், தங்க வைர நகைகளையும் பரிசாக பெற்றனர்.

  இதனால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியானது.

  இதற்கு முடிவுகட்ட வேண்டுமென தமிழக டிஜிபி சி.சைலேந்திரபாபு அவர்கள் திட்டமிட்டார். அதன் பேரில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டான ஏ.டி.எஸ்.பி வெள்ளைதுரையை சிறப்பு பணிக்காக வரவழைத்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு,திருவள்ளூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதியில் செயல்படும் ரவுடிகளை அடக்க பணித்தார்.

 இந்நிலையில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் செங்கல்பட்டு மாவட்டத்தில் இரட்டை கொலை செய்த இருவரை சில மணி நேரங்களிலேயே போலிசார் சுட்டு கொன்றார்கள்.

  இரட்டைக்கலை பின்னணியில் படப்பை குணா என்கிற குணசேகரன் இருப்பதாக சிறப்புபடைத் தலைவர் வெள்ளைதுரைக்கு தெரிய வந்தது. அதன் பேரில் குணாவை பிடிக்க முயன்ற போது ரவுடி குணா எஸ்கேப் ஆகிவிட்டார். அதற்கு போலிசில் உள்ள சில கறுப்பாடுகள் உதவியதாக கண்டுபிடிக்கப்பட்டது.

   இதையறிந்த வெள்ளைதுரை டீம் யாரெல்லாம் கறுப்பாடுகள் என்பதன் பட்டியலை டிஜிபி சைலேந்திரபாபு அவர்களின் மேஜையில் வைத்தார். அதனைத் தொடர்ந்து ஆறு இன்ஸ்பெக்டர்கள் உட்பட 40 போலிசாரை தென்மாவட்டங்களுக்கு உடனடியாக மாறினார் டிஜிபி,

  அதற்கு முன்னதாக படப்பை குணாவின் மனைவியை போலிசார் கைது செய்தனர். இத்தனைக்கும் அவர் பாஜகவில் இணைந்த காட்சிகள் வெளியான பின்னர் இந்த கைது நடந்தது.

  அப்படியெனில் காஞ்சிபுரம் ரவுடி டீமை அடியோடு ஒழிக்க வெள்ளைதுரை டீம் முடிவுகட்டியிருப்பது உறுதியானது.

   ஸ்ரீதர் மறைவுக்கு பின்னரும் அங்கு ரவுடிகளின் ராஜ்ஜியம் கொடிகட்டி பறந்து வந்ததன் எதிரொலியாக படப்பை குணா மற்றும் தியாகு என்கிற தியாகராஜன் ஆகியோரை சிறப்புபடை தேடிக்கொண்டு வெளி மாநிலம் சென்றனர்.

   இந்நிலையில் அரியானா மாநிலத்தில் தியாகு என்கிற தியாகராஜன் பதுங்கியிருப்பதை அறிந்த தமிழக போலிசார் அவரை கைது செய்தனர். 

   ரவுடி தியாகு அரியானாவில் இருந்து டெல்லி அழைத்துவரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறார். 

  யார் இந்த தியாகராஜன்,

   காஞ்சிபுரம் ரவுடியான பொய்யாக்குளம் தியாகு என்கிற தியாக ராஜன் போலிசார் சிலருக்கு நண்பன் என்று கருதப்பட்டவர்.

   ஸ்ரீதர் தற்கொலைக்குப் பிறகு, அவர் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று நினைத்தார் தியாகு. இதனால் பட்டு ஜவுளி வியாபாரிகள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரை மிரட்டி லட்சங்களை பறித்து வந்தார். இவர் மீது கொலை வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருப்பினும் ரவுடி மாமுலை விடவில்லை.

 2018 ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் "எஸ்.பி-யின் ஸ்பெஷல் டீமில் உள்ள பெரும்பாலானோரும், காஞ்சிபுரம் சரக காவல் துறையினரும் தியாகுவுக்கு நெருக்கமாக இருந்ததே இதற்கு முக்கியக் காரணம்.

  இருப்பினும் தியாகுவை என்கவுன்டர் ¢செய்யக்கூடும் என காவல்துறை நண்பர்கள் சிலர்¢ அறிவுறுத்தியதன் பேரில் அவர் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடைசி வாரம் நீதிமன்றத்தில் சரணடைந்து தப்பித்தார்.

  இந்த நிலையில், காஞ்சிபுரம் எஸ்.பி., ஸ்பெஷல் டீமில் உள்ள காவல் ஆய்வாளர் மணிமாறன், ஏட்டு சீனுவாசன் ஆகியோ£ ரவுடி தியாகுவுடன்¢ பேசிக்கொள்ளும் ஆடியோ ஒன்று அப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது,

 மேற்படி ஆடியோ, காவல் துறையினருக்கும் ரவுடிகளுக்கும் உள்ள நெருக்கத்தை அம்பலப்படுத்தியது.

  ஆனால் அப்போதைய ஆட்சியாளர்கள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.

  பிடிபட்டிருக்கிறார்.