ஏலகிரியில் ராஜேந்திர பாலாஜி பதுங்கலா? வீரமணியை நெருங்கும் போலிஸ்! கூட்டளிகளை மடக்கி விசாரணை!

ம.பா.கெஜராஜ்,
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை கோடியூர் மற்றும் திருப்பத்தூர் அடுத்த அக்ரகாரம் பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் இருவரை சிவகாசி போலீசார் பிடித்துச் சென்று விசாரணை
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்ததாக கடந்த 12 நாட்களுக்கு மேலாக தேடி வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் அக்கரகாரம் பகுதியை சேர்ந்த அதிமுக தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் விக்கி என்கிற விக்னேஸ்வரன், ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியை சேர்ந்த இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஏழுமலை ஆகியோரை சிவகாசி தனிப்படை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் ஏழுமலை முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணியுடன் நெருக்கமாக இருந்தவராம்.
ஆகவே ஏழுமலையின் செல்போனில் கே.சி.வீரமணியும், ராஜேந்திரபாலாஜியும் தொடர்பு கொண்டு ஏலகிரியில் தங்க வைக்கப்பட்டுள்ளாரா என்ற கோணத்திலும் தற்போது போலீசார் விசாரணை செய்து வருகிறார்களாம்.
இந்நிலையில் பிடிபட்ட இருவரின் போன்களில் அதிக நேரம் ராஜேந்திர பாலாஜி பேசி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் அடிப்படையில் தற்போது சிவகாசி போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து தற்போது ரகசிய இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரண் வளையத்தில் வீரமணியும் கொண்டுவரப்படுவார் என்று காவல் துறை வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.
வீரமணிக்கு ஓசூர், திருப்பத்தூர், ஏலகிரி போன்ற பகுதிகளில் சொகுசு ஓட்டல்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.