கள்ளச் சாராயம் விற்பனையில் பெண்கள்!

 ர.நி.ஆனந்தன்,

 திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஈச்சம்பட்டு உள்ளிட்ட பல கிராமங்களில் கள்ளச் சாராயம் விற்பனை அமோகமாக நடக்கிறது. இந்த திருட்டு வியாபாரத்தில் பெரும்பாலும் பெண்கள் ஈடுபட்டிருப்பதால் அவர்களை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

 இதை தடுக்க வேண்டியவர்கள் கண்டு கொள்வதில்லை,

ஏன்னா சம்மந்தப்பட்ட பகுதியின் ஊர் நாட்டாமை சௌந்தர் என்பவர் தலைமையில் இந்த கள்ளச் சாராய விற்பனை நடந்து கொண்டு வருகிறது.

 சாராயம் வியாபாரி சீதா (கணவர் பெயர் சேகர்) மற்றும் அவரின் மகன் திருநாவுக்கரசு ஊர் திருவிழாற்கு நன்கொடையாக 50000, ஒரு லட்சம் நன்கொடை கொடுப்பதால் ஊர் முக்கியஸ்தர்கள் யாரும் கண்டு கொள்வதில்லை.

 இதனால் ஊர் வாலிபர்களும் சிறு பிள்ளைகளும் போதைக்கு அடிமையாகி அவர்களின் எதிர்கால வாழ்க்கையை வீணாக்கி வருகிறார்கள்.

 ஆகவே அந்தப் பகுதி எதிர்வரும் காலங்களில் ஒரு கேள்விக்குறியாகிவிடுமோ என்ற அச்சத்தில் நல்ல எண்ணம் படைத்த பலர் சம்மந்தப்பட்ட துறைக்கு போன் மூலம் புகார் தெரிவிக்கப்பட்டால், அவர்கள் கள்ளச் சாராயம் முதலாளிகளுக்கு போன் செய்து  உங்க ஊரில் இருந்து ஒரு நபர் எங்களுக்கு போன் செய்கிறார்கள் அவர் யார் என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்,  எங்களுக்கு சிக்கலை உண்டாக்காமல் விற்பனை செய்து கொள்ளுங்கள் என்று காட்டிக் கொடுக்கப்படுகிறார்கள்.

  உள்ளூர் அதிகாரிகள் இப்படி செய்வதால் இந்த விஷயத்தை மாவட்ட அதிகாரியின் பார்வைக்கு கொண்டு செல்ல சில நல்ல உள்ளங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.