கஞ்சா போதையில் பெண்களுக்கு கத்தி வெட்டு!

ஜி.கே.சேகரன்,
500 ரூபாய் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறில் கஞ்சா போதையில் 2 பெண்கள் உட்பட 3 பேரை கத்தியால் வெட்டிவிட்டு தலைமறைவாக இருந்த 3 பேர் கைது.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த ஆதிபெரமனூர் பகுதியைச் சேர்ந்த சரவணன்என்பவரின் மகன் ஆகாஷ், விஜயா என்பவரின் மகன் அஜித் ஆகிய இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அருண் என்பவருக்கும் 500 ரூபாய் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்துள்ளது.
இதன் காரணமாக கடந்த 04.02.2923 தேதி அன்று ஆகாஷ் மற்றும் அஜித் அவருடைய நண்பர்கள் ஐந்து பேர் ஆகியோர் கஞ்சா போதையில் அருண் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுப்பட்டு பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் அருண்குமார் அவரது மனைவி காவியா மற்றும் தங்கை ஐஸ்வர்யா ஆகிய மூன்று பேரை வெட்டி உள்ளனர்.
பலத்த காயம் அடைந்த 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு நாட்டராம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் இது குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தலைமறைவாக ஆகாஷ் மற்றும் அஜித் அவருடைய நண்பர்களை தேடி வந்த நிலையில் நேற்று ஆகாஷ் வயது 22 அஜித் 22 திருப்பதி 22 ஆகிய மூன்று பேரையும் நாட்றம்பள்ளி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் நாட்றம்பள்ளி பகுதிகளில் அதிக அளவு கஞ்சா விற்பனை செய்ய படுவதாக கூறப்படுகிறது சிறுவயதிலே கஞ்சா அடித்து மாணவர்கள் சீரழிகிறார்கள் இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக கவனத்தில் கொண்டு கஞ்சா விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.