வழக்கறிஞர் கோர்டிலேயே சுடப்பட்டார்! கொலையா? தற்கொலையா?

வழக்கறிஞர் கோர்டிலேயே சுடப்பட்டார்! கொலையா? தற்கொலையா?

ம.பா.கெஜராஜ்,

வழக்கறிஞர் ஒருவர் கோர்ட்டிலேயே துப்பாக்கில் சுடப்பட்டு இறந்துகிடந்தார்.

 அந்த வழக்கறிஞரின் பெயர் பூபேந்தர் சிங், அவர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தாகவும், திடீரென பலத்த சத்தம் கேட்டபிறகு அவர் தரையில் விழுந்தாகவும் கூறப்படுகிறது.

 உத்தர பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் உள்ள மாவட்ட கோர்ட்டின் மூன்றாவது தளத்தில் ரத்த வெள்ளத்தில் அவர் இறந்து கிடந்துள்ளார். அருகில் நாட்டுத் துப்பாக்கி கிடந்தது.

  போலீசார் விசாரணை நடத்தினர்.

 இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ஆனந்த் கூறுகையில், 'வழக்கறிஞர் பூபேந்திர தனியாக இருந்ததாகத் தெரிகிறது. சம்பவம் நடந்தபோது அவரை சுற்றி வேறு யாரும் காணப்படவில்லை. தடயவியல் குழு தடயங்களை சேகரித்து ஆய்வு செய்கிறது. இறப்புக்கான காரணம் மற்றும் சூழ்நிலைகள் தெளிவாக தெரியவில்லை' என்றார்.

ஆக இது கொலையா? தற்கொலையா? என்பதை போலிஸ் தான் ஃபிக்ஸ் பண்ணும்.