இன்ஸ்பெக்டர் பேபி தலைமையில் கஞ்சா பறிமுதல்! பார்சல் போகுது அதையும் பிடியுங்களேன்!

ரா.மதன்,
வேலூர் மாவட்ட்டம், வேலூர், தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சார்பனா மேடு தண்ணீர் டேங்க் அருகே கஞ்சா விற்கப்பட்டு வந்தன. அது குறித்த இரகசிய தகவல் போலிசுக்கு கிடைத்தது.
அதனடிப்படையில் வேலூர் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் திருமதி பேபி மற்றும் பார்ட்டி சகிதமாக, மத்திய நுண்ணறிவு பிரிவு பார்டிகளான தலைமை காவலர்கள் சிவகுமார், ரங்கநாதன் சகீதம் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சுமார் 4 கிலோ கஞ்சா வை கைப்பற்றினர்.
ஜெயமோகன்(28), காந்தி (26), வெங்கடேசன் 3 நபர்களையும் கஞ்சாவையும் தெற்கு காவல் ஆய்வாளர்
திரு ரஜினிகாந்த் அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்களில் ஒருவர் லஷ்மிபுரத்தையும் அடுத்த இருவர் ஆற்காட்டையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
குறிப்பு:- மேற்படி தெற்கு காவல் நிலையத்தில் இருந்து எட்டிப் பார்த்தாலே தெரியக்கூடிய இடத்தில் தனியார் பார்சல் சர்வீஸ் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த இடத்தின் பெயர் பில்டர்பெட்ரோடு. இங்கு அவர்களது அலுவலகம் ஏதும் இல்லை. காட்பாடி காந்திநகரில் அது உள்ளது. ஆனால் இவர்கள் தினமும் நடுரோட்டில் பெரிய "ஈச்சர் லாரியை" நிற்கவைத்து சென்னைக்கு பார்சல்களை ஏற்றிச் செல்ல சேர்கிறார்கள். அதில் வாரத்துக்கு இரண்டு முறை கஞ்சா பாக்கெட்டும் பார்சல் வடிவில் சென்னைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நல்லாவே தெரியுமாம்.
அது சரி...!