ராஜபக்சே இந்தியாவுக்கு தப்பி வந்தானா?

ம.பா,கெஜராஜ்
இலங்கை முன்னாள் பிரதமர், விடுதலைப்புலி பிரபாகரனின் சாம்ராஜயத்தை குறுக்கு வழியில் அழித்தவனுமான அந்நாட்டு அதிபர் ராஜபக்சே, சிங்களர்களிடம் அடிவாங்கி செத்து போவதற்கு அஞ்சி இந்தியாவுக்கு தப்பியோடி வந்துவிட்டான் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன
.
ஏற்கனவே அவனது மகன் குடும்பத்தினர் ஹெலிகேப்டர்கள் மூலம் நைஜீரியா சென்றுவிட்டதாக கூறப்படும் நிலையில் இந்தியாவில் ராஜபக்சே தஞ்சம் அடைந்ததாக விஷயம் கசிந்திருக்கிறது.
இருந்த போதும், இந்திய தூதரகம் இந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ளது. ராஜபக்சே இந்தியாவுக்குள் வரவில்லை என்று அந்த தூதரகம் சொல்கிறது.
இந்நிலையில் அவன் திரிகோணமலையில் பதுங்கியிருப்பதாக போராட்டக்கார சிங்களர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறதாம்.
இந்நிலையில் இலங்கை அரசியல் தலைவர்கள் 35 பேரின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. ராஜபக்ஷேவின் வீடும் எரிக்கப்பட்டது. மேலும் ஏரளாமான வாகனங்கள், பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.
அப்படியிருக்க, இலங்கையிலிருந்து தமிழகத்திற்குள் தேச விரோதிகள் ஊடுருவ வாய்ப்பிருப்பதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை பலப்படுத்துவதற்கு தமிழக காவல்துறை, இந்திய கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஹம்பந்தோட்டா சிறையில் இருந்து 50 கைதிகள் தப்பியதாக தகவல் வெளியான நிலையில், அகதிகளோடு சேர்ந்து தேச விரோதிகளும் தமிழகத்திற்குள் நுழைய வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
சந்தேகப்படும்படி படகு உள்ளே நுழைந்தால் தகவல் தெரிவிக்கும்படி மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலை உளவுத்துறை வெளியிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
குறிப்பு:- இதுவரை நான் செய்தியில் எவரையும், ஒருமையில் குறிப்பிடுவதில்லை. ஆனால் இந்த செய்தியில் ராஜபக்சே என்று தட்டச்சு செய்யும் பொழுதே என் விரல்கள் அவன் என்று அச்சு செய்கிறது...அது தான் உணர்வோ!