ஆடு மாடு கொட்டாய்க்கு குடிநீர் இணைப்பு! ஜல் ஜீவன் திட்டம் முறைகேடு!
ச.பா.,
திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், தொழுப்பேடு கிராம ஊராட்சியில் தங்களின் கீழ் செய்யப்பட்ட ஜல் ஜீவன் திட்டப்பணியில் ஒரு வீட்டிற்கு இரண்டு, மூன்று, நான்கு குடிநீர் இணைப்புகள், காலி விட்டுமனைகள் மற்றும் ஆட்டுக் கொட்டாய், மாட்டுக் கொட்டாய்களுக்கு இணைப்புகள் கொடுத்து அந்த திட்டத்தை தவறாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.
மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்ட குடிநீர் இணைப்புகளை தவறாக செய்து அதிக லாபத்தை சம்பாதித்துள்ளனர்.
இம்முறைகேடுகள் குறித்து ஏற்கனவே இருவராக் புகார் அளிக்கப்பட்டு பணிகள் நிற்கவைக்கப்பட்டிருந்த போதிலும், மீண்டும் பணிகள் துவங்குகிறதாம்.
அதிலும் முறைகேடுகள் களையப்பட்டனவா? என்பதற்கான பதிலை சொல்ல சம்மந்தப்பட்ட அலுவலர்கள் எவரும் முன்வரவில்லையாம்.