தேசியக் கொடியை ஏற்றிய திமுக பிரமுகர்! கரூர் கலாட்டா!

தேசியக் கொடியை ஏற்றிய திமுக பிரமுகர்! கரூர் கலாட்டா!

 ம.தமிழரசன். 

குடியரசு தினமான இன்று தேசியக் கொடியை ஏற்றிய திமுக பிரமுகர் பெரிய சர்சையை ஏற்படுத்தியுள்ளார்.

  கரூர் மாவட்டம், கரூர் ஊராட்சி ஒன்றியத்தில்,  காதப்பாறை என்கிற ஊராட்சிமன்றம் உள்ளது. குடியரசு தினத்தையொட்டி அந்த அலுவலகத்தில்¢ தேசியகொடியேற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

   காதப்பாறை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடியரசு தின விழா இன்று நடைபெற்றது.

    இந்த பஞ்சாயத்து தலைவரின் அதிகாரம் ஏற்கனவே முடக்கி வைக்கப்பட்டுள்ளதால் பஞ்சாயத்து தலைவர் கலந்து கொள்ளவில்லை,

   இந்நிலையில் அருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் பிபி கந்தசாமி என்பவர் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

 சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய நாட்களில், கட்சிப் பிரமுகர்களும் கட்சி அலுவலகத்தில் ஏற்றலாம். ஆனால் கட்சிக்காரர்கள் அரசு அலுவலகங்களில் தேசிய கொடியை ஏற்றக்கூடாது.

  பஞ்சாயத்து அலுவலகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கட்டுப்பாட்டிலும் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலும் உள்ளது நினைவு கூறத்தக்கதாகும்.

  இந்நிலையில் இது திமுகவினரின் அத்துமீறல் என்று கூறப்படுகிறது.