அடுத்தவரின் இடத்துக்காக கதறும் போதகர்!!! போராடி பணம் பறிக்க திட்டம்!

ஜி.கே.சேகரன்,
வேலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே பெந்தகொஸ்தே சர்சுக்கு என தனி நபர் ஒருவர் இலவசமாக இடம் அளித்திருக்கிறார். ஆனால் அந்த இடத்தில் தற்போது சர்ச்சு நடத்துவதில்லை என்று கூறி போராட்டம் நடந்துள்ளது.
கொடுத்த இடத்தை மீண்டும் தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என 91 வயது மூதாட்டி போராட்டம் நடத்தினார்.
இந்த ஏற்பாட்டை விருதம்பட்டைச் சேர்ந்த சித்தரஞ்சன் என்பவர் முன்னின்று நடத்தியிருக்கிறார். அவர் அப்பாவி மக்களை கூலிக்கு அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ள நிலையில் இந்த போராட்டமானது காம்ப்ளக்ஸ் கட்டுவதற்காக திட்டமிட்டு நடத்தப்படுகிறது. என்னிடம் பணம் பறிக்க முயல்கிறார்கள். அவர்களுக்கு சாதகமாக நீதிமன்ற உத்தரவு எதுவும் வரவில்லை என்றும் போதகர் இம்மானுவேல் என்பவர் கூறுகிறார்.
மேற்படி இடம் தொடர்பாக அடிக்கடி மோதல்களும், கட்டப்பஞ்சாயத்துக்களும் நடந்து வருவது வாடிக்கையாக உள்ளது.
இது பற்றின விவரம் வருமாறு,
வேலூர் மாவட்டம்,வேலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள பகுதியில் 7. 5 செண்ட் இடம் உள்ளது. இந்த இடம், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் பெந்த கொஸ்தே சர்ச்சு நடத்த ஜீவரத்தினம் என்பவரால் தானமாக வழங்கப்பட்டது.
1970 ஆம் ஆண்டு இடம் வழங்கப்பட்ட போது அவர் சில நிபந்தனை விடுத்தார் இடத்தை விற்கவோ குத்தகைக்கு விடவோ வேறு பயன்பாட்டிற்கோ இதனை பயன்படுத்த கூடாது சர்ச்சு நடத்தவில்லை என்றால் அதனை மீண்டும் இடத்தின் உரிமையாளர்களிடம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்தாராம்.
இந்நிலையில், அந்த இடத்தில் இருந்த வழிபாட்டு தலமான சியோன் பெந்தே கொஸ்த்தே சர்ச்சு சில ஆண்டுகளுக்கு முன்னர் மற்றொரு புறம் உள்ள இடத்தில் பெரியதாக கட்டப்பட்டு அங்கு சர்ச்சு பயன்பட்டு வருகிறது.
இதனால் 1970 ஆம் ஆண்டு தானமாக அளிக்கப்பட்ட இடம் வழிபாடு நடத்தாமல் விடப்பட்டது.
இதனால் நிபந்தனையின்படி தங்களிடம் இடத்தை ஒப்படைக்க வேண்டுமென ஜீவரத்தினத்தின் வாரிசுகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவை பெற்றனர்?
ஆனால் இந்த இடத்தை தன்வசம் வைத்துள்ள சியோன் பெந்தகொஸ்த் போதகர் இமானுவேல் அதனை ஒப்படைக்காமல் அவசர அவசரமாக அங்கு கட்டுமான பணிகளை மேற்கு கொண்டதால் பிரச்சனை ஏற்பட்டது.
எனவே, வடக்கு காவல் நிலையத்தில் பெந்த கொஸ்தே சபையின் கிறிஸ்தவர்கள் ஒரு பிரிவினர் புகார் அளித்தனர். அதில் அந்த இடத்தை ஜீவரத்தினம் வாரிசுகளிடம் ஒப்படைத்து மீண்டு சர்ச்சு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டுமென முற்றுகையிட்டனர்.
அப்போது இடத்திற்கு உரிமையாளரான ஜீவரத்தினத்தின் மனைவி 91 வயது மூதாட்டி கணகசுந்தரி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் படுத்தபடி வந்து இடத்தை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதே நேரத்தில் போதகர் இமானுவேலின் ஆதரவாளரும் உட்பகுதியில் இருந்ததால் சட்டம் ஒழுங்கு பிரச்சணை ஏற்படும் சூழல் உருவானது.
அங்கு வந்த போலிசார், போராட்ட குழுவை சேர்ந்த சித்தரஞ்சன் மற்றும் ஜீவரத்தினம் வாரிசுகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின்னர் கிறிஸ்தவ மக்கள் கலைந்து சென்றனர்
இது குறித்து போதகர் இமானுவேல் கூறுகையில், இங்கு தொடர்ந்து வழிபாடு நடக்கும், இந்த இடத்தை நாங்கள் புதுப்பிக்கிறோம் இதனை அபகரிக்க சிலர் முயல்கிறார்கள்.
அப்பாவி மக்களை அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ள நிலையில், இந்த போராட்டமானது காம்ப்ளக்ஸ் கட்டுவதற்காக திட்டமிட்டு நடத்தப்படுகிறது. என்னிடம் பணம் பறிக்க முயல்கிறார்கள். அவர்களுக்கு சாதகமாக நீதிமன்ற உத்தரவு எதுவும் வரவில்லை, நான் தொடுத்த வழக்கில் இரண்டு முறை எங்கள் தரப்பில் ஆஜராகவில்லை என்பதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதே தவிர, அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு ஏதும் வரவில்லை.
அதே போல் சில டாக்குமெண்டுகள் தயாரிக்கப்பட்டதாகும் என்று போதகர் இம்மானுவேல் சொன்னார்.
இது ஒரு பக்கம் இருக்க, மேற்படி பிரச்சனைக்குரிய இடமானது தற்போது வில்சன் என்பவர் பெயரில் உள்ளது. அவருக்கு பவர் ஆப் அட்டர்னி மூலமாக நிலத்தின் முந்தைய உரிமையாளரின் வாரிசு கணகசுந்தரி பக்காவாக எழுதிக் கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில்,அந்த இடத்தை அடைய போதகர் இம்மானுவேலும் முயல்கிறார், போராட்டக்குழு என்கிற பேரில் சித்தரஞ்சன் என்பவரும் கலவரம் ஏற்படுத்த களம் இறங்கியிருக்கிறார்.
இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி பிரச்சனை பெரிதாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது உண்மையான கிறிஸ்த்தவ மக்களின் எதிர்பார்பாக உள்ளது.
குறிப்பு:- இந்த விவகாரத்தின் பின்னணியில் கூலிப்படையினர் உள்ளனர்.