பஸ்ஸில் தொங்கி... கீழே விழுந்து... அடங்காத மாணவர்கள்!

ஜி.கே.சேகரன்,
பஸ்ஸில் தொங்கி... கீழே விழுந்து எழுந்து, பார்பவர்களை பதபதைக்க வைக்கும் காட்சிகள் தமிழக பேருந்துகளில் தினமும் காண முடிகிறது. எத்தனை அறிவுரைகளை அரசு சொன்னாலும் அடங்காத மாணவர்களாக உள்ளனர்.,
அந்த வகையில் நேற்று உயிரை பணயம் வைத்து பயணம் செய்த மாணவர்கள் - தவறி விழுந்து மயிரிழையில் உயிர் தப்பினான். - இனி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்தால் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் பணி நீக்கம் செய்யப்பட்டு அந்த பணியில் வேறு ஒருவர் அமர்த்தப்படுவர் - பெற்றோர்களும் மாணவர்கள் உயிரை பணயம் வைத்து பேருந்துகளில் தொங்கிய படி செல்ல கூடாது என அறிவுறுத்த வேண்டும் வேலூர் மாவட்ட பெ.ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப. அவர்கள் மாணவர்களை அழைத்து பேசினார்.
வேலூர்மாவட்டம், வேலூர், பாகாயம் அருகே நேற்று பேருந்து படிக்கட்டில் நின்று சாகசம் செய்தபடி பயணம் செய்த மாணவர் ஒருவர் கீழே விழுந்தார். அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.
படிக்கட்டில் நின்று பயணம் செய்த மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் மற்றும் கல்லூரி முதல்வர் மற்றும் அந்தப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோரை அழைத்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர்களுக்கு அறிவுரை கூட்டம் நடைபெற்றது.
இதில் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில் படிகட்டில் மாணவர்கள் நின்றவாறு பயணம் செய்தால் அந்த பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் ஆகியோரை பணி நீக்கம் செய்து அந்த பணியில் வேறு ஒருவர் அமர்த்தப்படுவர் மேலும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இனி வரும் காலங்களில் மாணவர்கள் இது போன்று உயிரை பணயம் வைத்து தொங்கிய படி பேருந்தில் பயணம் செய்ய கூடாது என அறிவுத்த வேண்டும் என பேசினார்.
சாகச பயணம் செய்த மாணவர்களும் க்கூட்டத்தில் பேருந்தில் கலந்துகொண்டு அறிவுரை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.