தங்க கோயில் விநாயகரை 24 மணி நேரமும் வழிபடலாம்!

ஜி.கே.சேகரன்,
அரியூரில் தங்ககோவில் நுழைவாயிலில் சுமார் ஏழரை அடி உயரமுள்ள மூலஸ்தானத்தை கொண்ட மங்கள விநாயகர் ஆலயம் மஹாகும்பாபிஷேகத்தை சக்தியம்மா நடத்தி வைத்தார்
வேலூர் மாவட்டம், அரியூரில் தங்ககோவில் வளாகத்தில் ஸ்ரீநாராயணி அம்மன் தங்ககோவில் நுழைவாயிலில் புதியதாக மங்கள விநாயகர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்தில் சுமார் ஒன்றரை டன் எடையில் ஏழரை அடி உயரமுள்ள மங்கள விநாயகர் மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டு யாகசாலை அமைத்து சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
இதில் 108 பொருட்களை கொண்டு யாகம் நடத்தி கலசங்கள் மேளதாளங்கள் முழங்க ஆலயத்தை சுற்றி வந்தது பின்னர் கோபுரத்தின் மீது சக்தியம்மா திருக்கரங்களால் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மூலவர் மங்கள விநாயகருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதணைகளும் நடந்தது.
இதில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
இதற்கு முன்னர் தங்ககோவில் நுழைவாயில் உள் சென்ற பின்னர் விநாயகர் இருந்த நிலையில் தற்போது பொதுமக்கள் 24 மணி நேரமும் எப்போது வேண்டுமானாலும் விநாயகரை தரிசிக்க வண்ணம் விநாயகர் அமைந்துள்ளது.
மக்கள் 24 மணி நேரமும் எப்போது வேண்டுமானாலும் மக்கள் தரிசனம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.