பேர்னாம்பட்டில் பட்டா வழங்கிடுவோம் என ஆபிசர் வாக்கு!

பேர்னாம்பட்டில் பட்டா வழங்கிடுவோம் என ஆபிசர் வாக்கு!

   ஜி.கே.சேகரன்,

பேர்ணாம்பட்டில் சமூக சமத்துவப்படை கட்சியின் சார்பில் போன்மில் மற்றும் சிவராஜ் பகுதியில் 50 ஆண்டுகளாக வசிக்கும் 250 குடும்பங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க கோரி ஆர்பாட்டம் நடைபெற்றது.

 வேலூர்மாவட்டம்,பேர்ணாம்பட்டு நாலுகம்பம் அருகில் சமூக சமத்துப்படை கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் பொன்.குணசேகரன் தலைமையில் பேர்ணாம்பட்டு போன்மில் மற்றும் சிவராஜ் நகரில் சுமார் 250 குடும்பங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.

  அவர்களுக்கு அரசு இதுவரை வீட்டுமனைபட்டா வழங்கவில்லை.

  ஆகவே உடனடியாக வீட்டுமனை பட்டா கோரி அப்பகுதிகளை சேர்ந்த மக்கள் திரளானோர் ஆர்பாட்டத்தில் கையில் ஆதார் அட்டைகளுடன் பங்கேற்று கோஷங்களை எழுப்பினார்கள்.

  அதையறிந்த ஆபிசர்கள் ஆர்பாட்டாக்காரர்களை அழைத்து பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.