கள்ளச் சாராயத்துக்கு எதிராக மாணவிகள்!

கு.அசோக்,
வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரியிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக மது மற்றும் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் துவக்கி வைத்தார், அதில் மாணவிகள் பங்கேற்றனர்.
இராணிப்பேட்டை மாவட்டம்,வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் இன்று மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வை துறையின் சார்பில் போலி மது மற்றும் கள்ளச்சாராயம் ஆகிய மதுபானங்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களுக்கு விளக்கும் விதமாக விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
இதனை ராணிப்பேட்டைமாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் துவக்கி வைத்தார் இதில் மாணவிகள் கையில் மது மற்றும் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் சமுதாய சீரழிவுகள் மற்றும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விளக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் முழக்கங்களை எழுப்பிவாறு ஊர்வலமாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.