ராஜபாளையம் நகர் காவல் நிலையங்களில் ஸ்மார்ட் காவலர் செயலி!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
காவல் துறையினரின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் காவலர் செயலி, முதற்கட்டமாக ராஜபாளையம் நகர் பகுதியில் இயங்கும் இரண்டு காவல் நிலைய அலுவலர்களின் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதை டிஎஸ்பி ப்ரீத்தி தொடங்கி வைத்தார்.
காவல் துறையில் களப் பணியாற்றும் அலுவலர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காகவும், களப்பணியின் போது நிகழும் சம்பவங்களை உடனுக்குடன் பதிவு செய்வதற்காகவும்,கள அலுவலர்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலோ அல்லது உடனடி உதவிகள் தேவைப்பட்டாலோ அது குறித்த செய்தியினை உடனடியாக உயர் அலுவலர்களுக்கு தெரிவிக்க ஏதுவாக உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் காவலர் செயலியை கடந்த மாதம் 16 ம் தேதி டிஜிபி சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார்.
இந்த செயலி இன்று விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தெற்கு மற்றும் வடக்கு காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் நிலையங்களில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
டிஎஸ்பி ப்ரீத்தி இந்த செயலியை காவலர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து, அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார்.
பின்னர் 6 பீட்டுகளாக பிரிக்கப்பட்டுள்ள தெற்கு மற்றும் வடக்கு காவல் நிலைய சரகங்களுக்கான ரோந்து காவலர்களை டிஎஸ்பி அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.