வாட்ஸாப் கூட்டம் வேண்டாங்க ப்ளீஸ்:- ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கோரிக்கை!

கு.அசோக்,
கடந்த ஆட்சிகாலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டப்பணிகளுக்கு தமிழக அரசு போதிய நிதியை விடுவிக்க வேண்டும் -இரவு நேர கூட்டங்கள் உள்ளிட்டவைகளை கைவிட கோரியும், ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் கருவூலகம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் - உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி - வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மாலை நேர ஆர்பாட்டம்.
வேலூர் மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் மாவட்டத்தலைவர் வேலு தலைமையில் மாலை நேர ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் கடந்த ஆட்சிகாலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டப்ப்ணிகளுக்கு தற்போதைய தமிழக அரசு போதிய நிதியை விடுவிக்க வேண்டும் மாநில தலைவர் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
வாட்ஸ் ஆப் கூட்டங்கள், இரவு கூட்டங்கள் என ஆய்வுகூட்டங்களால் மன உளைச்சல் ஏற்படுகிறது.
ஆய்வு கூட்டங்களை கைவிட வேண்டும் ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் கருவூலகம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் வேலூர்மாவட்டத்தில் 7ஊராட்சி ஒன்றியங்களை 25 ஊராட்சி ஒன்றியங்களாக ஏற்படுத்த வேண்டும் போராட்டங்களின் போது எடுக்கப்பட்ட விடுமுறைக்கு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் திரளான ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்