இராணிப்பேட்டையில் கேமராக்கள் பொருத்தப்பட்ட பறக்கும்படை வாகனங்கள்!

இராணிப்பேட்டையில் கேமராக்கள் பொருத்தப்பட்ட பறக்கும்படை வாகனங்கள்!

உ.சசிகுமார்,

 தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட 36 பறக்கும் படை மற்றும் 36 நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறல் மற்றும் மதுவிலக்கு சம்மந்தமாக புகார்களை தெரிவிக்க இராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் காவல் கட்டுப்பாட்டு அறை கைபேசி எண் 93638 68465-ஐ தொடர்பு கொண்டும்/வாட்ஸாப் மூலமாகவும் தெரிவிக்கலாம்.

மேலும் தேர்தல் சம்மந்தமாக தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்புபவரின் சமூக ஊடகங்களின் கணக்கை காவல்துறை தொடர்ந்து கண்காணித்து கொண்டு வருகின்றது, அவ்வாறு தவறான தகவல்கள் குறுஞ்செய்தி வழியாகவோ/சமூக ஊடகங்களின் வழியாக பரப்புபவர்கள் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி டி.வி.கிரண் ஸ்ருதி, இ.கா.ப., தெரிவித்துள்ளார்.