பள்ளி கல்வி முடித்தவுடன் திருமணம் செய்து வைக்க கூடாது! எம்.எல்.ஏ.நந்தகுமார் அட்வைஸ்!

பள்ளி கல்வி முடித்தவுடன் திருமணம் செய்து வைக்க கூடாது! எம்.எல்.ஏ.நந்தகுமார் அட்வைஸ்!

 ஜி.கே.சேகரன்,

கிராமப்புற பெண்கள் கல்வியில் ஆர்வமுடன் படிக்க வேண்டும் பெற்றோர்க்ளும் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் திருமணம் செய்து வைக்க கூடாது உயர் கல்வியையும் பெண் பிள்ளைகள் பெற வெண்டும் விழாவில் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் பேச்சு - மிதிவண்டி ஓட்டிய ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்

 வேலூர்மாவட்டம்,அனைக்கட்டில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடந்தது.

  இதில் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமா£,¢ மாவட்ட ஊராட்சித்தலைவர் பாபு முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உள்ளிட்டோரும் பங்கேற்றனா.¢ இவ்விழாவில் ஒடுக்கத்தூர் பொய்கை, சின்னப்பள்ளிக்குப்பம்,அனைக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த 1856 பேருக்கு மாணவ,மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

  இதே போன்று பென்னாத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியிலும் 1000-க்கும் மேற்பட்ட விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

    இதில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் ஆகியோர் விலையில்லா மிதிவண்டிகளை அவர்களே ஓட்டி மகிழ்ந்தனர்.

  முன்னதாக அனைக்கட்டில் நடந்த விழாவில் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் பேசுகையில் கிராமப்புற மாணவ,மாணவிகள் கல்வி பெற அரசு விலையில்லா மிதிவண்டி பேருந்து இலவச பயணம் ஆகியவைகளை செய்துகொடுக்கிறது.

  நீங்கள் எதிலும் கவணம் சிதறாமல் படிக்க வேண்டும் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர் கல்வி கற்க வேண்டும் குறிப்பாக கிராமப்புற பெண்கள் பள்ளி கல்வி முடித்தவுடன் திருமணம் செய்கின்றனர் அந்த நிலையில்லாமல் பெற்றோர்கள் அவர்களை உயர்கல்வி பயில அனுப்ப வேண்டும் பெண்களும் நல்ல மதிப்பெண்களை பெற கல்வியில் சிந்தனையை செலுத்தினால் வாழ்வில் வெற்றி அடையலாம் என பேசினார்.