மாற்றுதிறனாளிகள் நலனுக்காக அரசுக்கு பரிந்துரைப்பேன்!ஆட்சியர்!

ம.பா.கெஜராஜ்,
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வு கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது இதில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு பல்வேறு நலத்திட்டங்களும் வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காயிதேமில்லத் கூட்டரங்கில் முதல்வரின் முகவரித்துறை சிறப்பு குறைதீர்வு வாரம் அடிப்படையில் மாற்றுதிறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு குறைத் தீர்வு முகாமில் 94 பயணிகள் ரூபாய் 3.16,000 மதிப்பீட்டில் அலிம்கோ நிறுவனம் மூலம் பெறப்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
அப்போது சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் தனஞ்செயன் முதன்மை கல்வி அலுவலர் கா.முனுசாமி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளனர்.
மேலும் இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று அவற்றை கேட்டறிந்த ஆட்சியர் துறை சார்ந்த அலுவலகம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பேசுகையில் தங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா அரசு அல்லது தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பேருந்து பயண அட்டை ரயில் பயண அட்டை உள்ளிட்டவைகள் வேண்டுமென கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்
பின்னர் இக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், மாற்றுதிறனாளிகள் வாழ்க்கை மேம்பாடு அடைய குறைதீர்வு முகாம்கள் நடத்தப்பட்டு அரசின் சார்பில் பல நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் அவர்கள் இந்த கூட்டத்தில் தங்களுக்கு இலவச வீட்டுமனைபட்டா மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகள் வேண்டுமென கோரியுள்ளனர் இதனை அரசுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்கபடும் என பேசினார்.
இந்திய சிலம்பம் சங்கம் மற்றும் ஆந்திரா சிலம்பம் சங்கம் சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் ஐந்து தங்கப்பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் என்று சாதனை படைத்துள்ள மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.
வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெலோகநாதன் அவர்கள் தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்துக்கு மாறுதலடைந்து சென்றார். அதற்கான ஆணையை ஆட்சியர் வழங்கி அவரை வழியனுப்பிவைத்தார்.