3026 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது! ஆட்சியர் தகவல்!

3026 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது! ஆட்சியர் தகவல்!

ஜி.கே.சேகரன்,

 வேலூர் மாவட்டம்,வேலூரில் உள்ள அருண் செவிலியர் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தமிழக அரசின் சார்பில் அரசு பள்ளியில் பயின்று உயர் கல்வி பெறும் மாணவிகளுக்கு வழங்கப்படும் மாதம் ரூ.1000 உதவி தொகை மூன்று மாதங்களாக வழங்கப்பட்டு வருகிறது.

 அந்த தொகையானது மாணவிகளின் வங்கி கணக்கில் சென்றடைகிறதா என மாணவிகளிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.

 மாணவிகளும் அரசு வழங்கும் உதவிதொகை மாதம் ரூ.1000 வங்கி கணக்கில் வருவதாக கூறினார்.

 பின்னர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப. அவர்கள் மாணவிகளிடையே பேசுகையில் மாணவிகள் உயர் கல்வி பெறுவதை ஊக்குவிக்கவே அரசு மாதம் ரூ.1000 வழங்கி வருகிறது.

 வேலூர் மாவட்டத்தில் 45 கல்லூரிகளில் 3026 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்பட்டு வருகிறது மேலும் விண்ணப்பிக்கும் மாணவிகளுக்கும் உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்.