வியாபாரிகள் சங்கம் சார்பில் கட்டிட நிதி ரூ.10 லட்சம் வழங்க முடிவு:-கூட்டத்தில் சலசலப்பு.!!

பா.சுரேஷ்,
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட வியாபாரிகள் சங்கம் மற்றும் நந்திவரம், கூடுவாஞ்சேரி அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் வருகிற 19.11.2023 அன்று சென்னையில் திறக்கப்பட உள்ள மாநில அலுவலக திறப்பு விழாவில் மாவட்டத்தின் சார்பில் எத்தனை நபர்கள் பங்கேற்பது மற்றும் எவ்வளவு நிதி வழங்குவது ஆகியவற்றுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட வியாபாரிகள் சங்க தலைவர் எம்.இந்திரஜித் தலைமையில் கூடுவாஞ்சேரியில் உள்ள ஏ.வி.என். சாரதாம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்க மாவட்ட செயலாளர் பி.லிங்கன் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மண்டல தலைவர் எம்.அமல்ராஜ் கலந்துகொண்டு வியாபாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது தலைமைக்கு கட்டிட நிதியாக சுமார் ரூ.10 லட்சம்
வழங்க முடிவு செய்யப்பட்டுள்தாக மண்டல தலைவர் தெரிவித்தார்.
மேலும் நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் வி. பாபு, பி.அல்லிமுத்து, எஸ்.மாணிக்கராஜா, ஆர்.தேவராஜ், எஸ்.சத்திய நாராயணன், ஆர்.மாதவன், நந்திவரம் கூடுவாஞ்சேரி வியாபாரிகள் நிர்வாகிகள் சங்க செயலாளர் டிஸ்கோ கணேசன், சங்க பொருளாளர் எஸ்.குமார்,ராசி சண்முகம், அமராவதி ராஜாமணி, செல்வக்கனி சித்திக், ஜெ.காளீஸ்வரன், ரூபி முருகேசன், சக்தி சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பேசப்பட்டு கருத்துகளுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது
முடிவில் சங்க மாவட்ட பொருளாளர் எம். மன்சூர்அலி நன்றி கூறினார்.