ஒன்றுபட்ட அதிமுக இல்லை எனில் ஜெயிக்க முடியாது! ஓபிஎஸ்!!

ஒன்றுபட்ட அதிமுக இல்லை எனில் ஜெயிக்க முடியாது! ஓபிஎஸ்!!

 டி.இ.இர்பான், 

 ஒன்றுபட்ட அதிமுக இல்லை எனில் யாருடன் கூட்டணி வைத்தாலும் அவர்களால் ஜெயிக்க முடியாது என்று ஓபிஎஸ் தெரிவித்திருக்கிறார்.

 பாஜகவோடு கூட்டணி வைக்காமல் அதிமுகவால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு, தான் தூது அனுப்புவதாக கூறப்படுவது வடிகட்டிய பொய் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

 ஓபிஎஸும், தினகரனும் அதிமுகவில் இணைவதற்காக முயற்சிகளை மேற்கொண்ட்ய் வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. குறிப்பாக, ஓபிஎஸ் பல முறை எடப்பாடி பழனிசாமிக்கு தூது அனுப்புவதாகவும் கூறப்படுகிறது.

  அப்படியிருக்க ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், "நான் எடப்பாடி பழனிசாமிக்கு தூது அனுப்புவதாக பரவும் செய்திகள் வடிகட்டின பொய். அவருக்கு தூது அனுப்ப எனக்கு அவசியம் இல்லை. இன்றைய சூழலில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தால் மட்டுமே அதிமுகவால் வெற்றி பெற முடியும்.

   அதுவும், ஒன்றுபட்ட அதிமுகவாக இருந்தால் மட்டும்தான் தேர்தல் வெற்றி சாத்தியம். இல்லையென்றால், யாருடன் கூட்டணி வைத்தாலும் அவர்களால் ஜெயிக்க முடியாது. நானும், டிடிவி தினகரனும் ஓரணியில் தான் இருக்கிறோம். எங்களுடன் இணைவது குறித்து சசிகலா தான் முடிவு செய்ய வேண்டும்" என ஓபிஎஸ் சொன்னார்.