அமைச்சர் ரோஜாவின் வெறித்தனம்!

அமைச்சர் ரோஜாவின் வெறித்தனம்!

வி.டி.வித்யாசாகர்,

 நடிகையும் அமைச்சருமான ரோஜா விசாகப்பட்டினத்தில் நடந்த குத்துச்சண்டை போட்டியை தொடங்கி வைக்க சென்றார். அப்போது திடீரென கையில் கிளவுஸை மாட்டிக்கொண்டு சண்டை போட ஆரம்பித்துவிட்டனர்.

 தற்போது ஆந்திராவில் ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் மந்திரிசபையில் சுற்றுலா, கலாசாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை மந்திரியாக பதவி வகித்து வருகிறார் ரோஜா.

 அரசு விழாக்களில் பங்கேற்க செல்லும்போது மக்களுடன் சேர்ந்து கலை நிகழ்ச்சிகளில் நடனம் ஆடுவது, கபடி விளையாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

  அப்படியிருக்க விசாகப்பட்டினத்தில் நடந்த குத்துச்சண்டை போட்டியை தொடங்கி வைக்க சென்ற ரோஜா திடீரென கையில் கிளவுஸை மாட்டிக்கொண்டு வீரர்களுடன் குத்துச்சண்டை போட்டார்.

  அங்கு கூடியிருந்த பார்வையாளர்கள் ரோஜாவை உற்சாகப்படுத்தினர்.