டிராபிக் போலிஸை பாடாய்படுத்தும் மாடுகளும்! ஓட்டல்காரரும்!

ம.பா.கெஜராஜ்,
டிராபிக் போலிசாரை மாடுகளும், ஓட்டல்காரரும் பாடாய் படுத்துகின்றனர்.
வேலூர் மாவட்டம், வேலூர் நகரில் தான் இந்த நிலவரம். வேலூரைப் பொறுத்தவரை போக்குவரத்து நெரிசலுக்கு பஞ்சமேயில்லை. குறிப்பாக கிரீன் சர்க்கில், பழைய பஸ் ஸ்டேண்ட் மற்றும் வெங்கடேஸ்வரா பள்ளிக்கூட சிக்னல் ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல்களால் ஏகப்பட்ட போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
இதனை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரக்கூடாது என்பதற்காக ஓட்டல் அதிபர் பல டெக்னிக்குகளை கையாள்கிறார்.
அவர் வைத்திருக்கும் ஓட்டல்கள் மூலம் போக்குவரத்து போலிசாருக்கு ஓசியில் நாஸ்டாவும், டி, காபி, போண்டா போன்றவற்றை வழங்கி வருகிறார்.
அதற்கு விசுவாசம் காட்ட வேண்டி இப்படி டிராப்பிக்கை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர்.
அதுமட்டுமின்றி மக்கான் பகுதியில் நூருல்லா என்பவர் மாடுகளை வளர்க்கிறார். இந்த மாடுகள் நகரின் மையப்பகுதியில் சுற்றித்திரிந்து போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்துகிறது.
அதே போல் காகிதப்பட்டரையில் உள்ள சிலர் வளர்க்கும் மாடுகள் கிரீன் சர்க்கிள் உள்ள சிக்னலில் சும்மா ஜாலியாக நகர்ந்து வருகிறது.
பாவம் டிராபிக் போலிஸ் அதற்கும் சேர்த்து சிக்னல் கொடுக்க வேண்டியதாக இருக்கிறது.
குறிப்பு:- கிரின் சர்க்கிள் ஆரியாஸ், பழைய பஸ் ஸ்டேண்டில் அலங்கார், (பேருந்து திருப்பவே முடியவில்லை), வெங்கடேஸ்வர சிக்னலில் ஆரியபவன் ஓட்டல், மாநகராட்சி எதிரில் டார்லிங் பேக்கரி போன்ற பகுதிகளில் அதிகாரிகள் கண்காணித்தால் நலம்.