தனிநபர் வீட்டில் செயல்படும் அரசு தொடக்கப்பள்ளி:- கட்டிடம் இல்லாததால் பிரச்சனை!!

செ.காவிப்ரியன்
அரசு தொடக்கப்பள்ளிக்கு கட்டிடம் இல்லாததால், தற்போது தனிநபர் வீட்டில் செயல்பட்டு வருகிறது. அங்கு இடப்பற்றாக்குறையால் வீட்டின் உரிமையாளார் ஒரு அறையிலும், மறு அறையில் பள்ளியும் செயல்பட்டு வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் செட்டேரி கிராமத்தில் ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 2020ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசால் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்.
இப்பள்ளியில் தற்போது 25 மாணவர்கள் படித்து வரும் நிலையில், மேற்படி தொடக்கப்பள்ளிக்கு அரசுக் கட்டிடம் இல்லாததால் செல்வம் என்பவருடைய வீட்டில் தற்காலிகமாக தகற கொட்டைகை அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தன.
அப்படியிருக்க தற்பொழுது பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன, இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டில் குடியேறியுள்ளார் ஒரு அறையில் வீட்டினுடைய உரிமையாளரும் மற்றொரு அறையில் மாணவர்களும் பாடம் நடத்தும் அவல நிலை உருவாகியுள்ளது.
மேலும் மாணவர்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லாததால் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் இதன் மீது கவனம் செலுத்தி உடனடியாக சொந்த கிஅட்டிடம் கட்டி ஒக்டுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.