குடியாத்தத்தில் ஆண்/ பெண் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
வேலூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் ஆண்கள், பெண்கள் (சீனியர்) சாம்பியன்ஷிப் போட்டி குடியாத்தம் அடுத்த கீழ்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியை டி.பி.ஏ. நண்பர்கள் குழுவானது வேலூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்துடன் இணைந்து நடத்தியது.
ஆண்கள் பிரிவில் 45 அணிகள், பெண்கள் பிரிவில் 6 அணிகள் இதில் பங்கேற்றனர்.
இந்தப் போட்டியை வேலூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகத் துணைத் தலைவர் இரா.சி.தலித் குமார் தொடக்கிவைத்தார்.
அமைப்பின் மாவட்டப் பொருளாளர் அம்மன் கே.ரவி, சர்வதேச நடுவர் பி.கோபாலன் மற்றும் பலர் பங்கேற்றனர். வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.20 ஆயிரம், ஆளுயர கோப்பை, இரண்டாம் பரிசு ரூ.15 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.10 ஆயிரம், நான்காம் பரிசு ரூ.7 ஆயிரம் வழங்கப்பட்டது.
இந்தப் போட்டியின் நடுவர்களாக வி.துளசி, எம்.நவமணி, பி.பாலகிருஷ்ணன், எம்.சுந்தர், டி.மோகன், சோழபாண்டியன், ஆர்.எம்.கிருஷ்ணன், எழிலரசன், ஜே.ராஜா, ஜெகன் மற்றும் பலர் பணியாற்றினர்.அனைத்து வீரர்களுக்கும் தங்குமிடம், உணவு வசதியை புரட்சி பாரதம் வெங்கடேசன் ஏற்பாடு செய்திருந்தார்.