திங்கள் மனு கொடுக்க வந்தவர் வெயில் தாக்கத்தால் மரணம்!

திங்கள் மனு கொடுக்க வந்தவர் வெயில் தாக்கத்தால் மரணம்!

 கு.அசோக்,

  வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லெத் கூட்டரங்கில் இன்று (17.04.2023) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாளில் மாவட்ட  ஆட்சித்தலைவர்  திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள்  பொதுமக்களிடம்  மனுக்களை பெற்று துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கி  நடவடிக்கை எடுக்க  உத்தரவிட்டார்.

  தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவை புரிந்ததற்காக 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதான வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பி. ஐஸ்வர்யா அவர்களுக்கு வழங்கினார். இதனைத் தொடர்ந்து இன்று (17.04.2023) வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்களிடம் திருநங்கை பி. ஐஸ்வர்யா அவர்கள்  சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.இராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.ஆர்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் திருமதி.வ.மு.சீதா  மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள்  உடனிருந்தனர்.

   அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவர் மயங்கி விழுந்து பலியானார்.

   பெருமுகையை சேர்ந்த மேஷாக் (63)  என்பவர் மனு அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார் வெய்யிலின் தாக்கம் கடுமையாக இருந்தது இதனால் மேஷாக் மயங்கி விழுந்தார்.

 உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதனை செய்த வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள் இதனை அடுத்து சத்துவாச்சாரி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து இறந்த மேஷாக்கின் உடலை பிரேதபரிசோதனைக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்