யூனிபார்முடன் முத்தக்காட்சி...போலிஸ் சஸ்பெண்டு!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்

  கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையின் ஆயுதப்படை காவலராக தேர்வு பெற்றார். அதன்பின்னர் இவர் கோவை மாநகர ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார்.

  இவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பெண்ணை கலப்பு திருமணம் செய்து கொண்டார்.

  இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அவரது மைத்துனர் மனைவியுடன் பழக்கம் இருந்து வந்துள்ளது.

   இந்நிலையில் இந்த கள்ளக்காதல் ஜோட் கோவை வாலாங்குளம் கரையில் அமைக்கப்பட்டுள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ஜல்சா செய்துள்ளனர்.

  இடையே இருவரும் முத்தமிட்டு அத்துமீறலில் ஈடுபடவே அப்பகுதியில் இருந்த ஆட்டோ ஓட்டுனர்கள், சிலர் அக்காட்சியை தங்களது செல்போனில் படம் பிடித்ததுடன் பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறி இருவரிடமும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

 பின்னர் அந்த சல்சா வீடியோ காட்சிகள் வைரலாகியது.

 இந்நிலையில் சீருடையில் பொது இடத்தில் அத்துமீறலில் ஈடுபட்ட  காவலர் பாலாஜியை தற்காலிக பணிநீக்கம் செய்து கோவை மாநகர ஆயுதப்படை துணை ஆணையர் முரளிதரன் உத்தரவிட்டுள்ளார்.