சாலையில் பயிர் செய்யும் மக்கள்!

கு.அசோக்,
ஜோலார்பேட்டை அருகே சேரும் சகதியுமாக உள்ள சாலையில் பொதுமக்கள் நாற்று நட்டு புதிய சாலை அமைக்க கோரி நூதன போராட்டம் நடத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம் ,ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட பாச்சல் பஞ்சாயத்து ஒன்பதாவது வார்டு பகுதியில் தெருச்சாலை சேறும் பொதுமக்கள் நாற்று நட்டு புதிய சாலை அமைக்க கோரி நூதன போராட்டம் நடத்தினர்.
இந்த சாலை மட்டுமல்ல பஞ்சாயத்துக்குள் 90 சதவீதமான பகுதிகளில் அனைத்து சாலைகளும் இதேபோல் சேரும் சகதியுமாக காட்சியளிக்கின்றன.
இது சம்பந்தமாக பல முறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆகவே இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டனராம்.