நான்கு நாட்களில் 3 கொலை! பரபரக்கும் போலிசார்!

நான்கு நாட்களில் 3 கொலை! பரபரக்கும் போலிசார்!

  கே.ஏ.ஜெகதீஷ்வரி,

  தூத்துக்குடியில், நான்கு நாட்களில் மூன்று படுகொலைகள் நடந்துள்ளது.

 கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நகைக்காக மூதாட்டி பவானி என்பவரும், கஞ்சா விற்ற தகராறில் ரவுடி முத்துப்பாண்டியனும் படுகொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்றிரவு முனியலட்சுமி என்பவர் படுகொலை செய்யப்பட்டார். கடந்த 4 நாட்களில் 2 பெண்கள் உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

  இந்த பட்டியலில் பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்திய தாய் சரமாரி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். காதலனுடன் சேர்ந்து மகளே இந்த வெறிச் செயலில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

   தூத்துக்குடி, மேல சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. டிரைவர். இவரது மனைவி முனியலட்சுமி (39). கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை விட்டு பிரிந்து ஜெயக்குமார் என்பவருடன் முனியலட்சுமி வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

 அப்படியிருக்க மூத்த மகளை பாலியல் தொழில் செய்ய முனியலட்சுமி வற்புறுத்தியுள்ளார். அவர் மறுத்துள்ளார். இருந்தும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். ஆனால் மூத்தமகள் இதற்கு சம்மதிக்காமல் தவிர்த்து வந்துள்ளார்.

  இந்நிலையில் நேற்று உச்சகட்டமாக மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அழைத்துள்ளார். அவரிடம் போய் உல்லாசமாக இரு. கூடுதலாக பணம் தருவார் என்று மகளிடம் முனியலட்சுமி கூறியுள்ளார். இதற்கு சம்மதிக்காத மூத்த மகள், தொடர்ந்து பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தும் தாயை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்.

    எனவே தனது காதலன் தூத்துக்குடி, முத்தையாபுரத்தைச் சேர்ந்த கண்ணன் (20) என்பவரிடம் கூறியுள்ளார். ''என் அம்மா உயிரோடு இருந்தால், எப்படியும் என்னை பாலியல் தொழிலில் தள்ளி விடுவார்'' என்று கூறி குமுறி அழுதாராம்.

  இதனால் பொங்கியெழுந்த காதன் குழு அமைத்து மாமியாரை போட்டுத் தள்ளியிருக்கிறார்.

  தென் மாவட்டங்களில் தூத்துக்குடியில் மட்டும் இப்படி வரிசையாக மூன்று கொலைகள் நான்கு நாட்களில் நடந்துள்ளது.

இதை எப்படி கையால்வது என்று போலிசார் வழக்கம் போலவே திட்டம் தீட்டி வருகிறார்கள்.