செக்ஸ் மேட்டரில் இரண்டு அரசு மருத்துவர்கள் கைது!

ம.பா.கெஜராஜ்,
அரசு மருத்துவர்கள் இருவர் செக்ஸ் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.கொரோனா கால தனிமை படுத்தலின் போது நடந்த பாலியல் அத்துமீறல் தொடர்பாக ஓராண்டுக்கு பின்னர் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு தமிழகத்தில் கொரோனா முதல் அலை தொடங்கியது.
அப்போது ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்த டாக்டர்கள் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஒட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டதால் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக அரசு இவர்களை ஓட்டல்களில் தங்க வைத்தது.
அப்போது கொரோனா சிகிச்சை பணியில் இருந்த பெண் டாக்டர்களும் அதே நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
அந்த சமயத்தில் அங்கு தங்கியிருந்த டாக்டர் வெற்றிச்செல்வன் (வயது 35) என்பவர் பெண் டாக்டர் ஒருவர் தங்கியிருந்த அறைக்கு சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதேபோன்று மற்றொரு டாக்டர் மோகன்ராஜ் (28), வேறொரு பெண் டாக்டரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் டாக்டர்கள் இருவரும் டீனிடம் புகார் செய்துள்ளனர். இந்தப்புகார் குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.
இதில் குற்றம்சாட்டப்பட்ட டாக்டர்கள் இருவரும் பெண் டாக்டர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பெண் டாக்டர்கள் இருவரும் அளித்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர்கள் வெற்றிச்செல்வன், மோகன்ராஜ் ஆகியோரை நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
மருத்துவ வட்டாரத்தில் இந்த கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.