திருட்டு வழக்கு கைதி ஆஸ்பத்திரியில் அனுமதி! போலிஸ் மீது குற்றச்சாட்டு!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
திருட்டு வழக்கில் கைதாகி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கள்ளக்குறிச்சியில் திருட்டு குற்றச்சாட்டின் கீழ் மூன்று பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் திருட்டு குற்றச்சாட்டில் மூன்று பேர் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களில் ஒருவரான சக்திவேல் (29) என்பவர் உளுந்தூர்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் அங்கு மருத்துவ வசதிகள் இல்லை என்பதால் அவர் கள்ளக்குறீச்சி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் தில்லை நகரைச் சேர்ந்த குறவர் இனத்தைச் சேர்ந்த பிரகாஷ், தர்மராஜ், செல்வம் ஆகிய மூன்று பேர் ஞாயிற்றுக் கிழமையன்று சீருடை அணியாத காவலர்கள் சிலரால் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பின்னர் காவலர்கள் அடித்து துன்புறுத்தியதாகவும் அவர்கள் ஏற்கனவே மாவட்ட ஆட்சித்தலைவரிடமும், எஸ்.பி.யிடமும் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் சக்திவேலுக்கு ஏற்பட்டுள்ள உடல் நலக்குறைவுக்கு போலிசார் தான் காரணம் என்று அவரது உறவினர்கள் குரலெழுப்புகிறார்கள்.