சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபரை மூன்று கிலோமீட்டர் தூரம் விரட்டிய பெற்றோர்!

 கு.பிரணேஷ்,

 சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபரை மூன்று கிலோமீட்டர் தூரம் விரட்டிய பெற்றோர் தொடர்பான பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது.

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை தென்கடப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்த இளைஞர் மணிகண்டன் இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.

 இந்த நிலையில் இவர் பள்ளமுள்ளுவாடி கிராமத்தில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார் அப்போது அந்த வழியில் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, பேனா வாங்குவதற்காக கடைக்கு சைக்கிளில் சென்றுள்ளார்.

  ஏரிக்கரை ஓரமாக உள்ள சாலையில் சிறுமி சென்ற போது, அதை நோட்டமிட்ட மணிகண்டன், சிறுமியை நிறுத்தி தனது நண்பனின் வீட்டிற்கு விலாசம் கேட்டுள்ளார்.

 அப்போது சிறுமி சைக்கிளைவிட்டு இறங்கி விலாசம் கூறுகையில், திடீரென மணிகண்டன், சிறுமி மீது பாலியல் சீண்டல் தொடுத்தார்.

 இதனால் சிறுமி கூச்சலிட்டாள். உடனே மணிகண்டன் அவனது இருசக்கர வாகனத்தில் தப்பினான். வாகனபதிவு எண்ணை சிறுமி குறித்துக்கொண்டு பெற்றோரிடம் அளித்தாள்.

 உடனே பெற்றோர் போலிசில் புகார் கொடுக்க சென்றனர். அப்போது அவ்வழியே அதே மணிகண்டன் சென்றுள்ளார், அவனை சிறுமி அடையாளம் காட்டியதும், பெற்றோர் அவனை பிடிக்க முயன்றனர். ஆனால் அவன் டூவீலரில் ஏறி தப்பினான்.

  பின்னர் சிறுமிதரப்பினர் அவனை சுமார் 3 கிமீ தூரம் துரத்தியும் பிடிக்கமுடியவில்லை.

  பின்னர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் மனு அளித்த நிலையில், இருசக்கர வாகனத்தின் பதிவு எண் உதவியோடு மணிகண்டனை கைது செய்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வேலூர் மகிலா நீதிமன்றத்தில் ஆஜர் படித்து மத்திய சிறையில் அடைத்தனர்.