ஓரின சேர்க்கை குற்றச்சாட்டில் தொடர்ந்து சிக்கும் நிர்வாகம்!

பாபு
கடந்த 17 வருடங்களுக்கு முன்பு ஒரு மாணவன் மர்மமான முறையில் தண்ணீர் தொட்டியில் இறந்த நிலையில் உடல் மீட்கப்பட்ட சம்பவவத்தில் சிக்கிய பள்ளி விடுதி நிர்வாகம், தற்போதும் அதே மாதிரியான விவகாரத்தில் மாட்டிக் கொண்டது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தாளவாடி ஊராட்சி பத்தியாவரம் புனித வளனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள புனித வளனார் அன்பு இல்லத்தில் 120 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர் இப்பள்ளியில் காப்பாளராக தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அய்யாதுரை மகன் துரைப்பாண்டியன் வயது 32 கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களிடம் சில மாதங்களாக ஓரின பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் இதனால் மன அழுத்தம் ஏற்பட்ட 8 மாணவர்கள் சைல்டு லைன் மூலம் புகார் செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவுன் குமார் ரெட்டி ஆகியோர் உத்தரவின்படி போளூர் டி.எஸ்.பி.குணசேகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பிரபாவதி சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் மற்றும் போலீசார் புனித வளனார் அன்பு இல்லத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
மாணவர்கள் மற்றும் விடுதி காப்பாளர் நடத்திய விசாரணையில் துரைப்பாண்டியன் மாணவர்களிடம் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்ததை தொடர்ந்து.
விடுதி காப்பாளர் துரைப்பாண்டியனை சேத்துப்பட்டு காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதே பள்ளியில் கடந்த 2005 ஆம் ஆண்டு வேலூரைச் சேர்ந்த வாணிஸ்ரீ என்பவரின் மகன் மற்றும் உறவுக்கார பிள்ளைகளான ராஜ்குமார், மோகன் மற்றும் கோபால கிருஷ்ணன் என்கிற 3 மாணவர்களை சித்ரவதை செய்தது இதே நிர்வாகம் தான். அப்போது அங்கு போராட்ட்டக்குழுவைச் சேர்ந்த எஸ்.கே.பி.லூர்த்து என்பவர் இந்த விவகாரத்தை பொது வெளிக்கு கொண்டு வந்தார்.
தற்போதும் அவரே இது குறித்து நேரடியாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
என்ன இருந்தாலும் தொடர்ச்சியாக இப்படி நடப்பதை உடனடியாக தடுக்க வேண்டும், விடுதி மாணவர்களை அவர்கள் அஞ்சாத அளவுக்கு உளவியல் நிபுணர்கள் விசாரிக்க வேண்டும்.