கூலிப்படைத் தலைவனும்:- காவல் துறையும்! மனைவி கைது! அதிர்ச்சித் தகவல்கள்! 

கூலிப்படைத் தலைவனும்:- காவல் துறையும்! மனைவி கைது! அதிர்ச்சித் தகவல்கள்! 

 ம.பா.கெஜராஜ், 

 கூலிப்படைத் தலைவன் குணசேகரன் என்பவர் தமிழக போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாவார். இவர் தனக்கு ஆதரவாக செயல்படுவதற்காக பல இளைஞர்களை காவல் துறையில் சேர்த்துவிட்டுள்ளாராம்.

  கூலிப்படைத் தலைவன் என போலிசாரால் அடையாள்ளம் காணப்பட்ட அவர் தற்போது தேடப்பட்டு வருகிறார்.

 இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள், பாஜகவில் இணைந்தார்! இந்தம்மா ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு வென்றவர் ஆவார்.

 விவரம் இப்படியிருக்க  குணாவின் மனைவி எல்லாமால் உட்பட மேலும் 5 பேரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இது பற்றின விவரம் வருமாறு,

 சென்னை புறநகர், காஞ்சி, செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் படப்பை குணா என்றால்  தெரியும்.  அந்த அளவுக்கு போலிசார் அவரை பிரபலப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

  அவரது  மனைவி பெயர் எல்லம்மாள். அவரை சுங்குவார்சத்திரம் போலீசார் கைது செய்தனர். மேலும், சென்னையை அடுத்து மதுராமங்கலத்தைச் சேர்ந்த மேலும் 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 கடந்த  இரண்டு நாட்களுக்கு முன்பு பாஜக மூத்த தலைவர் பொன்ராதாகிருஷ்ணன்  முன்னிலையில் எல்லம்மாளுக்கு  சால்வை அணிவிக்கப்பட்ட நிலையில் தற்போது  போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

   காஞ்சிபுரம் மாவட்ட ரவுடிகள் ஒழிப்பு பிரிவு தனிப்படை போலீசார்

தற்போது இந்த கைதுக்கு உதவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

   காஞ்சிபுரம் மாவட்ட ரவுடி படப்பை குணாவின் மீது 8 கொலை வழக்குகள் உட்பட 42 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

 இந்நிலையில் படப்பை குணாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் பொதுமக்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் அச்சுறுத்தலாக படப்பை குணா இருப்பதாக போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

 என்கவுண்டர் வெள்ளைதுரை.

 காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகிறது. இதனால் ரவுடிகளை ஒடுக்கவும், கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் எடிஎஸ்பியாக உள்ள வெள்ளத்துரை நியமிக்கப்பட்டுள்ளார்.

  இதனையத்து கடந்த ஒரு வாரமாக மணிமங்கலம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், காஞ்சிபுரம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரவுடிகளை கைது செய்து, பல்வேறு வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

 இந்நிலையில் தான் காஞ்சிபுரம் மாவட்ட பிரபல ரவுடி படப்பை குணா எனப்படும் குணசேகரன் மீது இந்த ஸ்பெஷல் டீம் குறிவைத்தது.

  இவர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து , அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது உள்ளிட்ட நிறைய ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளார்.

 இந்நிலையில், மதுரமங்கலத்தைச் சேர்ந்த அன்னப்பன் என்பவரின் மகள் ரூபாவதி. இவர் சுங்குவார்சத்திரம்அருகே உள்ள கீரநல்லூர் கிராமத்தில் மணிகண்டன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வருகிறார். அன்னப்பனுக்கு சொந்தமான காலிமனை பட்டாவை படப்பை குணா, சென்னை ஆயுதப் பிரிவு காவல் துறையில் பணிபுரிந்து வரும், அப்பு என்கிற சதீஷ்குமார், நாகராஜ் மற்றும் வெங்கடேசன் ஆகிய 4 நபர்களுடன் சேர்ந்து ரூபாவதியை மிரட்டி வாங்கி சென்றதாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

  புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி படப்பை குணாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 இந்த நில அபகரிப்பு வழக்கில் ஆயுதப்படை போலீசார் வெங்கடேசன் தேடும் குற்றவாளியாக இருந்து வந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் காவல்துறையினர் வெங்கடேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

போலிசிடம் பேரம் பேசினாரா குணா!

 பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள குணாவின் வழக்குகளை முடிப்பதற்கும், புகார்தாரர்களிடம் பேரம் நடத்துவதற்கும் படப்பை குணா கணிசமான தொகையை போலீசாருக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக குணாவிற்கு உதவி செய்த காவல்துறையினர் தற்போது அச்சத்தில் உள்ளனராம்.

 தொடர்ந்து படப்பை குணாவிற்கு யார் யாரெல்லாம் உதவி செய்தார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறதாம்.

   குணா தனது சொந்த ஊரான மதுரமங்கலம் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இருக்கும் இளைஞர்களுக்கு உதவி செய்து அவர்களை காவல் துறையில் சேர்த்து விட்டுள்ளார்.

  அவ்வாறு அவர் சேர்த்துவிடும் நபர்கள் அவருக்கு விசுவாசமாக அவர் சொல்லும் அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றனர் என கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் காவல்துறையில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  முன்னதாக படப்பை குணா சிறையில் இருந்தபோது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அவருடைய மனைவி எல்லம்மாள் ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டார். சுயேச்சையாக போட்டியிட்டு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக, அதிமுக வேட்பாளர்களை விட அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

  இதனை அடுத்து எல்லம்மாள் சுயேட்சையாக ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய தலைவர் பதவியைப் பெறுவதற்கு முயற்சி செய்தார். அப்போது திமுக வேட்பாளரும், எல்லம்மாள் இருவரும் சரிசமம் வாக்குகளை பெற்று, குலுக்கல் முறையில் திமுக வேட்பாளர் ஒன்றிய தலைவர் பதவியை எல்லம்மாள் தட்டிச் சென்றார்.

  படப்பை குணா சம்பந்தப்பட்ட பல வழக்குகளில் அவரை கைது செய்வதற்கு காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து நடப்பதை தடுக்க என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் எடிஎஸ்பி வெள்ளத்துரை நியமிக்கப்பட்டுள்ளதால் விரைவில் எல்லாமே முடிவுக்கு வருமாம்?