விடுதி விடுதியாக ஆய்வு செய்த ஆட்சியர்! கரார் காட்டி நடவடிக்கை!

ஜி.கே.சேகரன்,
வெளிமாநில நபர்கள் தங்கியுள்ள விடுதிகளில் ஆட்சியர் திடீர் ஆய்வு செய்து, அங்கு தங்கியிருந்த நபர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க அறிவுரை சொன்னார்.
வேலூ£ ¢மாவட்டம், வேலூரில் சி.எம்.சி மருத்துவமனை உள்ளது. இங்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள நாடு முழுவதுமிருந்துநோயாளிகளும் உறவினர்களும் குவிந்துள்ளனர். இதனால் நோய் தொற்று எண்ணிக்கை தினந்தோறும் உயர்ந்துகொண்டிருக்கிறது.
அப்படியிருக்க இன்று முழு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், மேற்படி மருத்துவமனைக்கு எதிரிலுள்ள பாபுராவ் தெரு,, காந்தி ரோடு ஆகிய பகுதிகளில் ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப. அவர்கள் நேரடியாக சென்று அங்குள்ள வெளிமாநிலத்தினரை சொந்த ஊர்களுக்கு அனுப்ப லாட்ஜ் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
பொதுமக்கள் ஆங்காங்கே நடமாட கூடாது எனவும் உத்தரவிட்டார். பல பகுதிகளில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
மினி ஹோட்டல்கள், இறைச்சிக் கடை உள்ளிட்டவைகளை சோதனை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறுகையில் இம்மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று உயர்ந்துகொண்டே செல்கிறது. தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் வேலூரில் உள்ள சிஎம்.சி மருத்துவமனைக்கு சாதாரண சிகிச்சைக்கு வெளிமாநிலத்தவர் அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விடுதியில் உள்ள வெளி மாநிலத்தவரை சொந்த ஊர்களுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளோம்.
திருமணம் தேர்வு ஆகியவைகள் அனுமதிக்கப்படுகிறது. திங்கட் கிழமை தோறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வட்டாச்சியர்களிடம் மனுவாக குறைகளை அளிக்கலாம் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஒத்தி வைக்கபடுகிறது.
தடையை மீறி வருபவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று சொன்னார்.