அபார்ட்மென்டில் அடுக்கடுக்கான பாலியல் தொல்லை! சிக்கினான் கிழவன்!

ராஜேஷ் குமார்,
அபார்ட்மென்ட் ஒன்றில் பலருக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக 62 வயது கிழவன் மீது புகார்கள் எழுந்தது. இந்நிலையில் அய்யா இப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
பிரின்ஸ் அப்பார்ட்மென்ட் என்கிற பெயரில், சென்னை, புதுவண்ணாரப்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அதில் 62 வயதான சேகர் என்பவர் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார்.
முன்னாள் ராணுவ வீரரான சேகர், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் குழந்தைகளிடம் தொடர்ந்து பாலியல் ரீதியாக அனுகிறாராம்.
பொறுத்து பொறுத்து பார்த்த குடியிருப்புவாசிகள் இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர்¢ பீர்பாஷா கிழவன் சேகரை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
பிடிபட்ட சேகர் குடியிருப்பு சங்கத்தின் முக்கிய பிரதிநிதியாக இருந்து வந்ததால் பெண்கள் யாரும் புகார் அளிக்காமல் இருந்தனராம்.,,,