ஏலகிரி படகு இல்லத்தில் பச்சை மரங்களை வெட்டிய நபர்! நடவடிக்கை உண்டா?

ஏலகிரி படகு இல்லத்தில் பச்சை மரங்களை வெட்டிய நபர்! நடவடிக்கை உண்டா?

ஜி.கே.சேகரன்,

 ஏலகிரி மலை படகு இல்ல பூங்காவில் இருந்த மரங்களை அனுமதி இன்றி வெட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க ஒப்பந்தக்காரர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

 திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது.

 ஏலகிரி மலையில் முக்கிய சுற்றுலாத் இடமாக விளங்குகிறது. இங்குள்ள படகு இல்லம் மிகவும் பிரபலம்.

 படகு இல்லத்திற்கு மெருகு ஏற்றும் வகையில் அங்கு  செடி, கொடிகள் ,மரங்கள், அமைந்துள்ளன.     அப்படியிருக்க அதனை அருகே உள்ள தனி நபர் அனுமதி ஏதும் பெறாமல் இரவோடு இரவாக பல மரக் கிளைகளையும் சில மரங்களையும் அடியோடு வெட்டி சாய்த்து உள்ளார்.

  அதுமட்டுமின்றி படகு இல்லம் சுற்றி போடப்பட்டிருந்த முள் வேலியை பிடுங்கி எறிந்து உள்ளார்.

  தடுப்பு வேலி இல்லாத காரணத்தால், தனியார் விளையாட்டு கிளப்பிற்கு வரும் சுற்றுலா பயணிகள்  நுழைவு கட்டணம் வாங்காமல் படகு இல்லத்திற்கு வந்து விடுவதாக படகு இல்லத்தை ஏலத்திற்கு எடுத்தவர்கள்  கூறுகின்றனர்.

   அதுமட்டுமன்றி அனுமதி வாங்காமல் மரக் கிளைகள் மற்றும் படகு இல்லத்தை சுற்றி போடப்பட்டிருந்த முள்வேலியை பிடிங்கி எறிந்த  நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஒப்பந்தகாரர்கள் மட்டுமின்றி பொது மக்கள் கோரிக்கை  வைக்கின்றனர்.