பாலாற்றை கதறவிடும் மாட்டு வண்டிக்காரர்கள்! வித வித கோஷம் எழுப்பி ரகளை!

ம.பா.கெஜராஜ்,

   பாலாற்று குவாரியில் ஆர்பாட்டம் செய்த மாட்டு வண்டிக்காரர்கள் வித விதமான கோஷம் எழுப்பி ரகளையில்

 வேலூர் பாலாற்றில் இயங்கும் அரசு மணல் குவாரியில் பல முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. குறிப்பாக மாட்டுவண்டிக்கு அளிக்க வேண்டிய 10 சதம் மணல் வழங்கப்படுவதில்லை என்று சொல்லப்பட்டது.

  இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

  அதனைத் தொடர்ந்து நேற்று அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

 அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், அரும்பருத்தி கிராமம், சர்வே எண்.242 பகுதியில், தமிழக அரசு மணல்குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு மணல் அள்ளப்பட்டு வேலூர் வட்டம், பெருமுகை கிராமத்தில் அமைந்துள்ள அரசு பொதுமக்களுக்கும், மணல் லாரி விற்பனை கிடங்கில் உரிமையாளர்களுக்கும் சேகரிக்கப்பட்டு, மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  இங்கு தற்பொழுது மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கும் மணல் விற்பனை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மாட்டுவண்டி தொழிலாளர்களின் அலைபேசி எண்கள் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கப்பட்டு செய்யப்பட்டன. மாட்டுவண்டிகளில் அவ்வாறு பட்டியல் ஸி.தி.லி.ஞி ஜிணீரீ பொருத்தும் தயாரிக்கப்பட்ட மாட்டு பணிகள் வண்டி தொழிலாளர்களின் அலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

   ஒரு மாட்டுவண்டி (0.25 யூனிட் மணல் விலை ரூ.800(வரிகள் உள்பட) என நிர்ணயம் செய்யபட்டுள்ளது.

  குறுஞ்செய்தி வரப்பெற்ற மாட்டுவண்டி தொழிலாளர்கள் பெருமுகை அரசு மணற்கிடங்கில் குறுஞ்செய்தியில் குறிப்பிட்ட தேதியில் மணல் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

  இதையறிந்த மாட்டுவண்டி சங்க தலைவர் என்று சொல்லப்படும் நபர் மணற்கிடங்கில் மணல் எடுக்க அழைப்பு பெறப்பட்ட வண்டிக்காரர்களை மிரட்டியதோடு அரசை எதிர்த்து கொஷம் எழுப்பி ரகளையில் ஈடுபட்டார்.

  விலை அதிகமாக இருப்பதால் இந்த ரகளை என்று காரணம் சொன்னாலும், உள்ளடி மேட்டர் இருப்பதாக பலரும் சொல்கிறார்கள்.

   எது எப்படியோ கண்ணீர் விடும் பாலாற்றை மேலும் கதறவிட ஊடக மாஃபியாக்கள் உட்பட பலர் கூட்டாக பணியாற்றுக்கிறார்கள் பணத்துக்காக.