ப்ரியா-உஷா-கௌவுரி:-ஐ.எப்.எஸ்.-ல் வட்டி பெற்றவர்களுக்கு ஆப்பு காத்திருக்கு! ஏஜெண்டுகளுக்கும் கிடுக்கிப்பிடி!

ம.பா.கெஜராஜ்,
கம்பி நீட்டிய இன்னொறு பைனான்ஸ் என்று ஏற்கனவே வெளியான கட்டுரையில் வேலூர் ஐ.எப்.எஸ்.(இன்டர் நேஷனல் பைனான்ஸ் சர்வீஸை) பற்றி சில பல தகவல்கள் வெளியானது. குறிப்பாக அந்த நிறுவனத்தை நம்பி பொது மக்கள் பலர் பணம் டெபாசிட் செய்தனர். அதில் ரூ.2,500/-கோடியை சுருட்டிக் கொண்டு அவர்கள் எஸ்கேப் ஆனார்கள் என சொல்லப்பட்டிருந்தது.
அந்த செய்தியை தொடர்ந்து அவர்கள் அபேஸ் செய்த பணம் குறித்த விவரங்கள் மூன்று இளம் பெண்களுக்கு தெரியும் என்று தகவல்கள் வெளியானது. அப்போது அவர்களின் விவரம் வெளியாகாத நிலையில் தற்போது முதற்கட்டமாக அந்த பெண்களின் பெயர்கள் தெரியவந்துள்ளது.
அதாவது ப்ரியா, உஷா, கௌவுரி எனபதே அந்த பெண்களின் பெயர்கள் ஆகும்.
இவர்களில் உஷா பெங்களூருவில் பெரிய வில்லாவில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார். இவர் ஐ.எப்.எஸ் நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான ஜனார்த்தனனின் பர்சனல் அக்கவுண்டன்டாக இருந்துள்ளார். அதே போல் வேலூரைச் சேர்ந்த பிரியா இவர் ஒரு தனி கணக்கை மெயின்டெய்ன் செய்கிறாராம். மேலும் தற்போது சென்னை, சேத்பட் பகுதியிலுள்ள கில்கிறிஸ்ட் என்கிற அவென்யூவில் வசிக்கும் கௌவுரி. இவர் ஜனார்த்தனுடன் பள்ளித் தோழியாம்.
இவர்களுக்கும் அபேஸ் செய்யப்பட்ட பணத்துக்கும் என்ன தொடர்பு என்பது பற்றி விலாவரி திரட்டிக் கொண்டிருக்கும் போதே, எஸ்கேப் ஆன மேற்கண்ட பைனான்ஸ் முதலாளிகள் உள்நாட்டில் இருந்தால் பிரச்சனையில்லை. ஆனால் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டால் அவர்களை மீண்டும் உள்ளே கொண்டு வரமுடியாது என்று பொருளாதார மேதைகள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
இந்நிலையில், ஐ.எப்.எஸ். நிறுவனம் அம்பேல் தான் என்று ஏற்கனவே மக்களுக்கு சூசகமான முறையில் சொன்னவர் பொருளாதார நிபுணர் ஆனந்த சீனிவாசன். அதற்காக அவர் வீடியோவே வெளியிட்டார். அவர் கணித்தபடி எல்லாமே நடந்து முடிந்து விட்டது.
அப்படியிருக்க அவரும், ஸ்டாக் மார்க்கெட் நிபுணர் விநோத் என்வரும் இணைந்து சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் ஆனந்த சீனிவாசன் தெரிவித்திருப்பதாவது,
ஐ.எப்.எஸ். நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் பணத்தை மீட்க முடியுமா என்றால், கட்டாயம் முடியும். அதற்கு அரசுகள் மும்முரம் காட்ட வேண்டும். குறிப்பாக ரிசர்வ் வங்கியும், செபியும் (Securities and Exchange Board of India)இந்த விஷயத்தை கையில் எடுக்க வேண்டும். அவை ஏன் எடுக்கவில்லை என தெரியவில்லை.
அதே போலவே சென்னை உயர் நீதிமன்றத்தின் பார்வைக்கு மேற்படி பைனான்ஸ் பற்றி தெரிந்த பின்னரும், மத்தியில் எப்படி சும்மா இருக்காங்க எனறு தெரியவில்லை.
உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால் அமெரிக்காவில் இது போல ஒரு நிதிநிறுவன சம்பவத்தில் கிட்டத்தட்ட 84 சதவிகித முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்ப பெற்று கொடுக்கப்பட்டிருக்கு. இதற்கு 13 ஆண்டுகாலம் பிடித்தது, இன்னும் நடவடிக்கை தொடர்கிறது.
அதே போல இந்தியாவில் முப்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த ஹர்ஷத் மேத்தா வழக்கிலும் பணம் கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப அளிக்கப்பட்டு விட்டது. அதே போல் தான் சகாரா நிதி நிறுவன விஷயத்திலும் நடந்தது. முதலீட்டாளர்களுக்கு பெரும்பாலும் பணம் திரும்ப அளிக்கப்பட்டிருக்கு.
இதற்கு பெரும் பங்காற்றியதே செபியும், ரிசர்வ் பேங்கும் தான்.
அதைத்தான் இங்கேயும் செய்ய வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்க முன்வரும் போது, மக்களிடம் பணம் வசூல் செய்த ஏஜெண்டுகளிடமும் பணம் வசூல் செய்யப்படும். அதாவது அவர்கள் பெற்ற கமிஷன் பணத்தை திரும்ப வசூல் செய்வார்கள்.
ஏஜெண்டுகள் தெரியாமல் ஒன்றும் இதை செய்யவில்லை. தெரிந்து செய்ததாகவே அர்த்தம். அதே போல் பணம் போட்டவர்களில் பலர் வட்டி வாங்கியிருப்பார்கள், அந்த வட்டி பணம் வங்கியின் மூலம் அளிக்கப்பட்டிருந்தால் அவை வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்ப வசூலிக்கப்படும்... என்கிற ரீதியில் அந்த வீடியோ நீள்கிறது.
இதை வைத்து பார்க்கும் போது, வங்கி மூலமாக வட்டி வாங்கி திண்றுக் கொண்டிருந்த டெபாசிட்தாரர்களுக்கும், அதே போல் கமிஷன் பெற்று டிப்டாப்பாக வலம் வந்த ஏஜெண்டுகளுக்கும் ஆப்பு காத்திருக்கு என்றே தெரிகிறது.
அதுமட்டுமின்றி டெபாசிட்தாரர்களுக்கு கொடுக்கப்பட்ட வட்டி பணத்தை, கடன் கொடுத்ததாக அந்த நிறுவனம் சொல்லி அதை திரும்பி செலுத்த சட்ட நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புகள் உள்ளது. ஆக டெபாசிட்தாரர்களை இந்த பிரச்சனை வேறு திசையை நோக்கி இழுத்துக் கொண்டு போய் தள்ளிவிடும் அபாயம் உள்ளது.
ஏன்னா வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை போன்ற இடங்களில் குட்டி தாதாக்களை ஸ்டாக்கிஸ்டு கிங்குகளாக பெயர் சூட்டி பந்தோபஸ்தாக வைத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் பொருளாதாரத்தை பற்றி பெரிதும் அறிந்திராத பொருளாதார குற்றப்பிரிவினரைக் கொண்டு ஐ.எப்.எஸ். மேட்டரை விசாரிக்க முடியாது.
ஏன்னா இதுல முதலீடு செய்திருப்பது பொதுமக்கள் என்று தான் தற்போதைக்கும் சொல்ல முடிகிறது. ஆனால் அரசு அதிகாரிகளும், குறிப்பாக காவல் துறையைச் சேர்ந்த பலர் இதுல பிணாமிகள் பெயரில் முதலீடு செய்து வட்டி வாங்கியிருக்கிறார்கள்.
அப்படி என்றால் மணி லாண்டரிங் ஆக்ட், பிரவின்ஷன் ஆப் கரப்ஷன் ஆக்ட், வருமான வரிச்சட்டம் போன்றவை இதில் பாயும்.
விஷயம் இப்படியிருக்க, இந்த பைனான்ஸ் மீதான புகார்களை யார் விசாரிக்கிறார்கள், எப்படி விசாரிக்கிறார்கள் என்று ஒன்றுமே தெரியவில்லை. அதுமட்டுமின்றி அவர்கள் என்னத்தை கண்டுபிடித்தார்கள் என்றும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
ஆனால் அந்த பைனான்ஸின் முதலாளிகளான லட்சுமி நாராயணன்,வேத நாராயணன், ஜனார்த்தனன் ஆகியோர் எஸ்கேப் ஆவதற்கு முன் அவர்களுக்கு சொந்தமான ஆடம்பர பங்களாக்களில் இருந்த பல ஆவணங்களை லாரிகளில் தூக்கிச் சென்றிருக்கிறார்கள் என்கிற விவரங்கள் சாதாரணமானவர்களுக்கும் தெரிந்திருக்கிறது.
அப்படின்னா....? பார்கலாம்,