திருவலம் ரயில்வே பாலம் சீரமைப்பு பணியால் ரயில்கள் ரத்து! பயணிகள் அவதி! ஆம்னி பேருந்துகளுக்கு கொண்டாட்டம்!

ஜி.கே.சேகரன்,
வேலூர்¢ மாவட்டம் திருவலம் ரயில்வே பாலம் சீரமைப்பு பணியால் ரயில்கள் ரத்து! பயணிகள் அவதி! ஆம்னி பேருந்துகளுக்கு கொண்டாட்டம் ஆகிவிட்டது.
மேற்படி திருவலத்தில், பொன்னையாற்றின் குறுக்கே ரயில்வே பாலத்தில் விரிசல் ஏற்பட்டதை கடந்த கடந்த 23ம் தேதி கண்டறி யப்பட்டதுபாலத்தில் ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது.
சென்னை பெங்களூரு மார்கமான அங்கு இரண்டு பாலங்கள் இருந்தும் மற்றொன்றை ரயில்வே நிர்வாகத்தினர் அவ்வளவாக பயன்படுத்தவில்லை.
இதனால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் ஆறுதலாக, ஒரு சில சரக்கு ரயில்கள் மற்றும் வடமாநிலங்களில் இருந்து வரும் குறிப்பிட்ட சில வாராந்திர ரயில்கள் மட்டும், மற்றொரு பாலத்தில் இயக்கப்பட்டன.
இந்நிலையில், பழுதான மேம்பாலத்தில் 38, 39வது தூண்கள் உள்ள பகுதியில் பகுதியில் தேங்கிய நீர் அகற்றப்பட்டு வேறு பாதைக்கு திருப்பிவிடப்பட்டது.
ரயில்வே பொறியாளர் குழுவினர், இரவு பகலாக அங்கு பணியாற்றி விரிசல்களை சரி செய்து வருகிறார்கள்.
பணிகள் முடிவடைய உள்ள நிலையில், நாளை முதல் வழக்கம் போல் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு கொண்டாட கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு சென்னையிலிருந்து ரயிலில் செல்ல முன்பதிவு செய்திருந்த பயணியர், தற்போது ஆம்னி பேருந்துகள், கார்கள் மூலம் ஏர்போர்ட் சென்று விமானத்தில் செல்கின்றனர்.
இதனால், ஆம்னி பேருந்து, கார் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி பயணிகளை படாதபாடு படுத்தி வருகிறார்கள்.
பொன்னை ஆற்றின் குறுக்கே இரண்டு பாலங்கள் உள்ளன. ஒன்றில் மட்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது. மற்றொரு பாலத்தில், ஒரு வழிப்பாதையாக மாற்றி ரயில்கள் இயக்கப்பட்டிருந்தால் பயணிகளுக்கு பண விரயம் ஏற்பட்டிருக்காது என்று கூறப்பட்டாலும், அந்த பாலத்தையும் செக் செய்ய வேண்டியுள்ளாதால் அந்த திட்டம் தவிர்க்கப்பட்டதாம்.