டி.எஸ்.பி.,திருநாவுக்கரசு தலைமையிலான டீம்:-550 சிசிடிவி கேமிரா! ஆய்வு, 700 கிலோ மீட்டர் சுற்றி பின்தொடர்வு!! 60 ஆயிரம் போன் கால்கள்:- என்னது இது?

கு.அசோக்,
கடந்த மாதம் திருடு போன கடத்தல் லாரியை 550 சிசிடிவி கேமிரா ஆய்வு, 700 கிலோ மீட்டர் சுற்றி பின்தொடர்வு, 60 ஆயிரம் போன் கால்களை ஆராய்ந்து மீட்ட காவல் துறை, 2 பேரை கைது செய்து சிறையில் அடைப்பு.
வேலூர்மாவட்டம்,வேலூர் அடுத்த பிள்ளையார் குப்பத்தில் இராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த நித்தியானந்தம் இவரது டிப்பர் லாரி ஒன்று பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனை கடந்த 18.05.2022 அன்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இது தொடர்பாக சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் லாரி உரிமையாளர் நித்தியானந்தம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதி செய்த சத்துவாச்சாரி காவல் துறையினர் முதற்கட்டமாக லாரி நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்துள்ளனர்.
அதில் சேன்ட்ரோ காரில் வரும் இரண்டு நபர்கள் லாரியை நோட்டமிட்டு அதில் ஒரு நபர் லாரியை கடத்தி செல்வது பாதிவாகியிருந்தது.
இக்காட்சியை வைத்து லாரி சென்ற சாலைகளில் உள்ள அனைத்து சிசிடிவி கேமிரக்கலையும் தொடர்ச்சியாக ஆய்வு செய்துள்ளனர்.
முகம் சரியாக பதிவாகாததால் லாரியை கண்டுபிடிக்க வேலூர் எஸ்.பி. ராஜேஷ் கண்ணண் வேலூர் காவல்துணை கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
தனிப்படை காவலர்கள் பிள்ளையார் குப்பத்தில் பதிவான சிசிடிவி கேமிரா காட்சியை அடிப்படையாக வைத்து நாகப்பட்டினம் வரை சுமார் 550 சிசிடிவி கேமிராக்கலை ஆய்வு செய்துள்ளனர்.
மேலும் சைபர் கிரைம் காவல் துறையின் உதவியுடன், மூன்று இடங்களில் இருந்து சுமார் 60 ஆயிரம் செல்போன் நம்பர்களை ஆய்வு செய்தும் அதில் இருந்து 300 எண்களை இறுதி செய்தும் அவற்றின் மூலம் லாரி கடத்தி சென்றவர்களை கண்டறிந்துள்ளர். இதற்காக மொத்தம் 700 கிலோ மீட்டர் பின் தொடர்ந்துள்ளனர்.
இதனையடுத்து லாரியை கடத்தி சென்ற ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மனோஜ் டிவாரி, கன்னியாகுமாரி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவர் ஓசூரில் இருப்பது தெரியவந்து அவர்களை கைது செய்தனர்.
மேலும் கடத்தப்பட்ட லாரி நாமக்கலை சேர்ந்த ஜெகன்நாதன் என்பவரிடம் விற்க்கப்பட்டது தெரியவந்த பின்னர் அதுவும் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் லாரி கடத்ததில் கைது செய்யப்பட்ட இருவர் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவர் மீது 6 மாநிலங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூரில் கூட மூன்று சகோதரர்கள் குரூப் லாரி திருட்டை ஜரூராக செய்துக் கொண்டிருக்கின்றனர்.