ராணுவ வீரரின் மனைவியை செருப்பால் அடித்த ரவுடிகள்!

ஜி.கே.சேகரன்,
ராணுவ வீரரின் மனைவியை நடுவீதியில் செருப்பால் அடித்து மானபங்கம் செய்தவரை கைது செய்யகோரி ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் ஆர்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூரை சேர்ந்த இளங்கேஸ்வரன், இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரது மனைவி பூமணியை சில ரவுடிகள் சிலர் ஆபாசமாக பேசியுள்ளனர்.
அது பற்றி தட்டி கேட்டதற்கு செருப்பால் தாக்கி மக்கள் முன்னிலையில் மானபங்கம் செய்துள்ளனர்.
இது குறித்த தகவல் அறிந்தும் போலிசார் வழக்கம் போலவே அமைதிகாத்ததால், ராணுவ முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளான ராணுவ வீரர்களும் முன்னாள் படைவீரர்களும் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.