.மாணவர் படுகொலை! சங்க தேர்தலில் பரிதாபம்!

டி.முகமது இர்பான்,
இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர் படுகொலை செய்யப்பட்டார்.
மாணவர் சங்க தேர்தலில் ஏற்பட்ட மோதலில் கேரள மாநிலம் இடுக்கியில் இந்த சம்பவம் நடந்துள்ளதுஸ்.
அங்குள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மாணவர் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸின் கே.எஸ்.யூ மாணவர் அமைப்பினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூ- ன் எஸ்.எஸ் மாணவர் அமைப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது.
மோதலில் கண்ணூர் பகுதி இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த தீரஜ், அபிஷித், அமல் ஆகியோர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், படுகாயமடைந்த தீரஜ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக காங்கிரசை சேர்ந்த கே.எஸ்.யூ மாணவர் அமைப்பின் நிர்வாகி நிகில் பயிலியை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே எர்ணாகுளம் மகாராஜா கல்லூரி மற்றும் காங்கிரஸ் மாணவர் அமைப்பு இடையே ஏற்பட்ட மோதலில் 8 பேர் படுகாயம் அடைந்தனர் என்று கூறப்படுகிறது.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
முரட்டு தேர்தலாக அல்லவா இருக்கு?