சீட்டிங் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறை! கண்கலங்கும் புகார்தாரர்!

 சீட்டிங் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறை! கண்கலங்கும் புகார்தாரர்!

ஜி.கே.சேகரன்,

  வெளிநாடுகளில் உள்ள உயர்தர ஓட்டல்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பெட்சீட்  சப்ளை செய்வதில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டித் தருவதாகக் கூறி 75 இலட்சம் மோசடி செய்ததாக ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, பணத்தை மீட்டுத் தருமாறு கண்ணீர் மல்க பேட்டி

 திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் முகமதுபுறா 2-வது தெருவை சேர்ந்தவர் முஸ்தாக் அஹமத், அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் உள்ளனர்.

 அவருக்கு, கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த விபத்தில் கண் பார்வை இழந்துள்ளார்.

 இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு சின்ன மசூதி தெருவை ஜுல்தாப் அஹமத் அவரது மனைவி ஆயிஷா சனாபர் இவரது, சகோதரர்  உசேன் மற்றும் ஜுல்தாப் அஹமதுவின் சகோதரர்கள் தபஷியா ,அஸ்பா , நஸ்ரத் ஆகியோர் ஆசைவார்த்தை கூறி பணம் ஏமாற்றியிருக்கிறார்.ஸ்

  துபாய்   உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பெட்சீட்டை ஏற்றுமதி செய்வதில் முதலீடு செய்தால் 8 சதவீத லாபம் ஈட்டித் தருவதாக கூறி முகமது மற்றும் அவரது உறவினர்களிடம் பல தவணையாக ரூபாய் 75 லட்சம் பணம் பெற்றுள்ளார்.

 ஆனால் சொன்னபடி ஆர்டர் பெற்றுத் தராததால், சில ஆண்டுகளுக்குப் பிறகு கொடுத்த அசல் பணத்தை திருப்பித் தர இயலாது எனவும் வெறும் 5 லட்சம் பணத்துக்கான காசோலை கொடுத்து மோசடி ஈடுபட்டதாகவும்  ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் 11:12:2021 அன்று புகார் அளித்துள்ளார்.

 புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டியதால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் ஐ.ஜி டி. ஐ .ஜி தலைமைச் செயலாளருக்கு புகார் அளித்துள்ளார்.¢ 

 இது குறித்து ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் ஏடிஎஸ்பி சுப்புராஜ் தலைமையில் பண மோசடி சம்பந்தமான புகார் குறித்த சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டனா.¢

  இருப்பினும் பண மோசடி குறித்து நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள்  என காவல்துறையினர் தெரிவித்ததால் விரக்தியடைந்த முஷ்தாக் அகமது தான் பார்வை  இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும்  நான் எனது மனைவி மூலம் உறவினர்கள் நண்பர்கள் என 30க்கும் மேற்பட்டோரிடம் ரூபாய் 75 லட்சம் வாங்கிக் கொடுத்ததால் தனது வீட்டின் அருகே வந்து பணம் கொடுத்தவர்கள்  தொந்தரவு செய்வதாகவும் கண் கலங்கினார்.

 பெட்ஷீட்  ஏற்றுமதி செய்வதில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த நபர்கள் மீது வழக்கு பதியாமல்  போலிசார் மெத்தனம் காட்டுவதாக கூறும் அவர், உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தருமாறு கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டிருக்கிறார்.