பழங்குடி இருளர் பெண்ணுக்கு பலான டார்ச்சர்...கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

பழங்குடி இருளர் பெண்ணுக்கு பலான டார்ச்சர்...கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

  முருகன்,

  இருளர் பிரிவைச் சேர்ந்த பெண்ணுக்கு பலான டார்ச்சர் கொடுக்கப்பட்டுள்ளது, வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டல்! அதன் பேரில் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது பற்றின விவரம் வருமாறு,

  செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள காவாதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி தேவி (வயது 35). இவர்கள் இருவருக்கும் 2 மகள் 2 மகன் உள்ளனர். நேற்று இரவு 9 மணிக்கு குடும்பத்துடன் அமர்ந்து உணவு சாப்பிட்டு விட்டு அனைவரும் உறங்க சென்றுள்ளனர்.

  நள்ளிரவு 12 மணிக்கு தேவியின் அருகில் யாரோ படுப்பது போல தெரியவே அந்த நபரை தள்ளிவிட்டு சத்தம் போட்டு கூச்சலிட்டு உள்ளார்.

மனைவியின் சத்தத்தைக் கேட்டு எழுந்த முருகன் செல்போன், டார்ச்சை அடித்து பார்த்த போது, அதே கிராமத்தைச் சேர்ந்த சுந்தரேசன் என்பவர் என்பது தெரிய வந்தது.

 அப்படியிருக்க கயவன் சுந்தரேசன் தேவியின் கணவனை-தாக்கி விட்டு அசிங்கமாக பேசி நடந்ததை யாரிடமாவது வெளியே சொன்னால் பெட்ரோல் ஊற்றி  இருளர் சமூகத்தின் அனைத்து குடிசையையும் கொளுத்தி விடுவேன் என மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

  இதுகுறித்து சித்தாமூர் காவல் நிலையத்தில் தேவி கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுல்ராஜ், தலைமறைவாக இருந்த  சுந்தரேசனை கைது செய்து அவர் மீது அசிங்கமாக பேசியது, ஜாதியை பற்றி வன்கொடுமையாக பேசியது, மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  இதுகுறித்து அப்பகுதி இருளர் மக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் இதுபோன்ற சம்பவம் இரண்டாவது முறையாக நடக்கின்றது என்கிறார்கள்.