47 பேரை கடித்த வெறிநாய்:- சோளிங்கரில் பரபரப்பு!

47 பேரை கடித்த வெறிநாய்:- சோளிங்கரில் பரபரப்பு!

  கு.அசோக்,

சோளிங்கரில் நேற்று ஒரு மணி நேரத்தில் சுமார் 47  பேரை வெறி நாய் கடித்து குதறியது.

காயமடைந்தவர்களை  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் தகவலறிந்த ராணிப்பேட்டை கோட்டாட்சியர் பூங்கொடி சோளிங்கர் வட்டாட்சியர் நேரில் சென்று ஆறுதல் கூறி பழம் பிஸ்கட் வழங்கினார்கள் மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

 இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பஸ் நிலையம் அருகே வெறிபிடித்த நாய் ஒன்று சுற்றித் திரிந்து கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென அந்த நாய் அவ்வழியாக சென்றவர்கள் துரத்தி துரத்தி கடித்தது.

 பாட்டிகுளம், போர்டின் பேட்டை, தோப்பு கோவில், ஈஸ்வரன் கோவில் தெரு, பஜார் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சென்று நடந்து சென்ற பொதுமக்களை வெறிநாய் கடித்து குதறி உள்ளது.

 இதில் படுகாயமடைந்த சேகர், முருகேசன், அண்ணாமலை ,பாரதி, கணேசன், கண்ணன், கணபதி, போளிப்பாக்கம் முனுசாமி ,கூடலூர் நரசிம்மன், அன்வர்திகன்பேட்டை ரங்கநாதன், வெங்குபட்டு வீரபத்திரன் ஆகிய 12 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  தொடர்ந்து வெறிநாய் மார்கெட் பகுதியில் சிலரை கண்டித்துள்ளது இதனால் பொதுமக்கள் வெறியை அடித்து கொன்றனர்.

   சுமார் ஒரு மணி நேரத்தில்  47 பேரை  வெறிநாய்  கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

   இந்நிலையில் தகவலறிந்த இராணிப்பேட்டை கோட்டாட்சியர் பூங்கொடி  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேற்கண்டவர்களுக்கு பழம் பிஸ்கட் வழங்கினார்.

  அப்போது வட்டாட்சியர் வெற்றிகுமார்,அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் இளங்கோவன், வருவாய் ஆய்வாளர் சீனிவாசன் கிராம நிர்வாக அலுவலர் கணேஷ், கிராம நிர்வாக உதவியாளர்கள் சிவா, ஐயப்பன் உடனிருந்தனர்.