இப்படிப்பட்ட பெண்ணை கூடவா விடமாட்டீங்க?

ச.மைக்கேல்,
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே நாகமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் 48 வயது பெண். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார்.
கணவனை பிரிந்த அவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் தன்னுடைய தாயாரின் பாதுகாப்பில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த பெண்ணின் தாய் சமையல் வேலைக்கு உதவியாளராக சென்று வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது மகளை வீட்டில் தனியாக விட்டு விட்டு வேலைக்கு சென்று விட்டார்.
அப்போது நள்ளிரவு 12.30 மணியளவில் பக்கத்து வீட்டுக்காரர்கள் அந்த பெண்ணின் தாயாருக்கு போன் செய்து உங்கள் வீட்டு திண்ணையில் மகளும், அருகே ஒரு ஆணும் ஆடைகள் இல்லாமல் படுத்துக்கொண்டிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அங்கு சென்று விசாரித்ததில் அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த தண்டபாணி என்பதும் மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.
பதறிய அந்தப் பெண்ணின் தாயார் இதுகுறித்து காங்கேயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர் காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய தண்டபாணி என்பவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் அவர் ரிமாண்டு செய்யப்பட்டார்.